கடைசி காலம் THE END TIME 54-0307A ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், மார்ச் 7, 1954 மாடிசன் ஸ்கொயர் கார்டன், பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் கடைசி காலம் (54-0307A) உங்கள் அனைவருக்கும் மதிய வணக்கம் நண்பர்களே. இந்த மதிய வேளையில் இங்கே இருப்பதிலும், கிறிஸ்துவுக்குள் உங்களுடைய வீரமிக்க விசுவாசத்தைக் காண்பதிலும், இந்த வெப்பமான கட்டிடத்தில் வந்து அமர்ந்திருப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இது உங்களுக்கு வெப்பமாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் என் வடக்கத்திய இரத்தம் மிகவும் அடர்த்தியானது. இது நிச்சயமாக வெப்பமாக இருக்கிறது, நான் கொஞ்சம்... சகோதரர் ஷாரிட் அந்த கோட் என்றார்... இப்போது, அது ஒரு சிறிய பழைய மெல்லிய அல்பாகா கோட்; அது வெறும் என் சட்டை மட்டுமே; அது அவ்வளவுதான். நான் சொன்னேன், "இதில் எனக்கு பயங்கரமாக வியர்க்கிறது." எனவே நான்... இப்போது, அவர் சொன்னார், "சரி, உள்ளூர்வாசிகளுக்கு இது இங்கு மிகவும் வெப்பமாகத் தெரியவில்லை." நீங்கள் அதற்கு பழகிவிட்டதால் அப்படி இருக்கலாம் என நான் நினைக்கிறேன். 2 ஆனால் நான் இங்கே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிஷனரி பணிக்காக, என்னிடம் கொடுப்பதற்காக அவர்கள் ஒரு காணிக்கையை எடுத்தார்கள் என்று சகோதரர் மூர் இப்போதுதான் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நன்றி-நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான்-இதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான்-நான்... மிஷனரி என்றாலே ஏதோ ஒன்று என்னை-அது... நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் செய்வது என்னவென்று எனக்குத் தெரியும்... நீங்கள் மிஷனரிப் பணிகளுக்குக் கொடுக்கும் போது தேவனுடைய சித்தத்தைச் செய்கிறீர்கள். அது சரிதான். ஒரு நபர் ஒருமுறை கூட சுவிசேஷத்தைக் கேட்காதபோது, இன்னொருவர் இரண்டு முறை அதைக் கேட்பது நியாயமல்ல. புரிகிறதா? ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு முறையாவது சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும், எனக்குத் தெரிந்த அனைவருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நான் என் பங்கிற்கு முயற்சிக்க விரும்புகிறேன். மற்றும் நான்... 3 முற்காலத்தில், கூட்டங்களில் கிடைக்கும் வெகுமதிகளில் வித்தியாசமானவைகளையும், எனக்கு மீதமிருந்தவற்றையும், அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் பலவற்றிற்கு நான் கொடுப்பது வழக்கம். இப்போது, எனக்கு அவர்கள் மீது எந்த எதிர்ப்பும் இல்லை, இல்லவே இல்லை. சால்வேஷன் ஆர்மி, வாலண்டியர்ஸ் ஆஃப் அமெரிக்கா, செஞ் சிலுவை சங்கம், போலியோ ஒழிப்பு இயக்கங்கள் மற்றும் அதுபோன்ற பல காரியங்கள் என அவர்கள் அனைவரும், ஒவ்வொருவரும் நல்லவர்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த காரியங்களுக்குக் கொடுப்பது நல்லதுதான். ஆனால் என் கூட்டங்களுக்கு வருபவர்கள் பொதுவாக ஏழை மக்கள் என்றும், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் ஆர்வமுள்ளவர்கள் என்றும் நான் நினைத்தேன். உலகத்தில் அநேகர், தேவாலயத்திற்குச் செல்லாத சாதாரண மக்கள், தொழிலதிபர்கள், மற்றும் பலரும் அந்த இயக்கங்களுக்கும் மற்றவற்றிற்கும் ஆயிரக்கணக்கான டாலர்களை காசோலைகளாக எழுதிக் கொடுக்கும் அதே வேளையில், ஒரு ஏழை மிஷனரி குறையோடு கஷ்டப்படுகிறார். 4 எல்லாவற்றிற்கும் மேலாக... எல்லோரும் நலமாக இருப்பதைப் பார்ப்பதை நாம் விரும்புகிறோம் என்பது நமக்குத் தெரியும். பசியாயிருப்பவர்கள் போஷிக்கப்படுவதைப் பார்க்க நாம் விரும்புகிறோம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்த மனுக்குலத்தின் எந்தவொரு காரியத்தைக் காட்டிலும் ஆத்துமா மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதுதான் என்றென்றும் நிலைத்திருக்கும். நான்... உங்களுக்குத் தெரியுமா, எப்போது... ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு மிஷனரியாக இருக்க கடமைப்பட்டிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடமைப்பட்டிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். இப்போது, நீங்கள் பழைய நாடுகளுக்குச் சென்று பிரசங்கிக்க வேண்டும் என்பது போன்றதல்ல. ஆனால் உங்களால் செல்ல முடியாவிட்டால், வேறொருவரை அனுப்ப நீங்கள் உதவலாம். புரிகிறதா? பாருங்கள்? வேறொருவரை அனுப்ப நீங்கள் என்ன செய்கிறீர்கள்... இயேசு எப்போது திரும்புவார் என்று சீஷர்கள் அவரிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஏன், அவர் சொன்னார்... அவர் எப்போது திரும்புவார் என்பதற்கான அடையாளத்தை எங்களுக்குக் காண்பியும்; அவர் சொன்னார், "யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப் படுவீர்கள்." (அது சரியாக இருக்கும்.) "தகப்பன்மார்கள் தாய்மார்களுக்கும், தாய் மார்கள் மற்றும் பெற்றோர் பிள்ளைகளுக்கும் விரோதமாக எழும்புவார்கள் என்று கேள்விப் படுவீர்கள்" என்றார். ஆனால் அது இன்னும் வரவில்லை. அவர் சொன்னார், "அவர்கள் அனைவரும் வித்தியாசமாக இருக்கும் ஒரு காலம் வரும், அது... ஒழுக்கங்கள்... பெண் கொள்வார்கள் பெண் கொடுப்பார்கள் மற்றும் பல." அது இன்னும் வரவில்லை. ஆனால் அவர், "இந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும்போது, அவர் திரும்புவார்" என்று சொன்னார். கிறிஸ்தவ நண்பர்களே, நாம் எங்கே செய்திருக்கிறோம்? நாம் பரிதாபமாகத் தோற்றுப்போனோம். அது சரியா? நான்... 5 நான் முதல் முறை ஃபீனிக்ஸ்-க்கு வந்ததிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக நீங்கள் என்னைப் பின்பற்றியிருந்தால், நான் பார்த்ததைப் பார்த்திருந்தால், வீதிகளில் பசியுடன் இருக்கும் சிறு பிள்ளைகளையும், ஆப்பிரிக்காவில் கறுப்பினச் சிறுவர்களையும், சிறுமிகளும் சகதியான நீரோடையிலிருந்து குடிப்பதைக் காண முடியும்; அவர்கள் அறிந்த ஒரே தண்ணீர் அதுதான், பிறகு குடிக்கும்போது ஒருவேளை முதலையால் கடித்துக் குதறப்படலாம். குளியல் என்றால் என்ன வென்றே அவர்களுக்குத் தெரியாது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அவர்கள் அறிந்தி ருக்கவில்லை, வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது, தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டதில்லை, வயல்வெளியில் புழுக்கள்-புழுக்கள் நிறைந்த எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்... அவர்கள் புழுக்களையும் எல்லாவற்றையும் சாப்பிடு கிறார்கள். அதனால் அவர்கள்... அது-அது மட்டும்தான் அவர்களுக்கு சாப்பிடத் தெரியும். நான் இங்கு ஒரு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அதிக காலம் ஆகவில்லை, ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் இடத்தில் இரண்டு அல்லது மூன்று மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தார்கள், அங்கே ஆப்பிரிக்காவில் ஒரு சபாரி நடத்தும் நபர், நான் அவருடன் வேட்டையாடச் சென்றால் என் பயணச் செலவை அவர் ஏற்பார் என்று அறிய விரும்பினார். அவர்கள் TWA (விமானத்தில்) செல்கிறார்கள். நான் சொன்னேன், "நான்-நான் வேட்டையாட அங்கு செல்லவில்லை. இயேசு கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை வேட்டையாடப் போகிறேன்." 6 நான் அவரிடம் அந்த உள்ளூர்வாசிகளின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர், "சரி, ரெவரெண்ட் பிரன்ஹாம்," என்று அவர் சொன்னார், "நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், அந்த மக்கள்... அது மனிதர்கள் அல்ல." நான் சொன்னேன், "என்னை மன்னியுங்கள், டாக்டர். நீங்களோ அல்லது நானோ எவ்வளவு மனிதர்களோ அதே அளவு மனிதர்கள்தான் அவர்களும்." அது சரிதான். அவர், "ஓ, அவர்கள் அப்படி இருக்க முடியாது," என்றார். நான் சொன்னேன்... என்ன கேள்வி எழுந்தது. நான் சொன்னேன், "நம்முடைய சுகாதார முறைகள் எல்லாம் நமக்கு ஏதேனும் உதவியிருக்கிறதா? நம்மில் ஒருவர் அதுபோல எதையாவது சாப்பிட்டால், இரவுக்கு முன்பே நாம் இறந்துவிடுவோம். ஆனால் அவர் அதைச் சாப்பிடுகிறார், அது அவருக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. நம்மிடையே நாம் காணும் நோய்களில் பாதி கூட அவர்களிடத்தில் நீங்கள் காண முடியாது. நாம் ஏதோ ஒரு வகையான மருந்தைப் பெறுகிறோம், அது எதற்காவது உதவலாம், ஆனால் வேறெதையாவது நமக்குக் கொண்டு வந்துவிடும்." புரிகிறதா? 7 அது நமக்கு ஏதேனும் உதவியிருக்கிறதா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஆரம்பத் திலேயே தேவன் நமக்குச் சொன்ன வழியில் நாம் சென்றிருந்தால், நாமும் நல்லபடியாகவே இருந்திருப்போம் என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? இப்போது அதைக் கண்டிக்க வில்லை, இல்லை, ஆனால் கவனியுங்கள், அது நாட்களைச் சுருக்குகிறது. ஏன், அங்கே ஒரு வயதான கறுப்பினப் பெண்மணி அமர்ந்திருந்தார், அவர் டேவிட் லிவிங்ஸ்டன் பிரசங்கித்ததைக் கேட்டதாகக் கூறினார். அவருக்கு நூற்று முப்பது, முப்பத்தைந்து வயதிருக்க வேண்டும். பாருங்கள்? அங்கே... அதை நினைத்துப் பாருங்கள். இந்த டாக்டர் சொன்னார், "அவர்கள் மனிதர்கள் அல்ல." நான் சொன்னேன், "அவர்கள் நம்மைப் போலவே மனிதர்கள்தான்." நான் சொன்னேன், "டாக்டர், மனித இனத்திற்கு மிக நெருக்கமான விலங்கான சிம்பன்ஸியிடமிருந்து ஒரு முணுமுணுப்பையாவது கொண்டுவர கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக நீங்கள் முயற் சித்தீர்கள்." நான் சொன்னேன், "அதனிடமிருந்து ஒரு முணுமுணுப்பையாவது கொண்டுவர நீங்கள் முயற்சித்தீர்கள், ஆனால் உங்களால் முடியாது. அதால் முற்றிலும் சிந்திக்க முடியாது, மற்றும் அது... அதில் ஒன்றுமே இல்லை; அதற்குள் ஆத்துமா இல்லை." 8 ஆனால் நான் சொன்னேன், "எனக்கு ஒரு சிறிய புஷ்மேனைக் கொடுங்கள்." அது ஆப்பிரிக்காவின் மிகக் கொடிய பழங்குடியினம். "எனக்கு ஒரு சிறிய புஷ்மேனை அழைத்து வாருங்கள். அவனுடைய கொள்ளு, கொள்ளு, கொள்ளு, கொள்ளு, கொள்ளுத் தாத்தா ஒரு வெள்ளைக்காரனையோ அல்லது நாகரீகத் தையோ பார்த்ததுகூட இல்லை. அந்தச் சிறுவனுக்கு எது வலது கை, எது இடது கை என்று தெரியாது. வாரத்தின் எந்த நாள் என்றோ அல்லது வேறு எதுவுமோ அவனுக்குத் தெரியாது; அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தனக்கு சாப்பிடக் கிடைப்பதைப் பெற்றுக் கொள்வது மட்டும்தான். அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவனுக்கு ஆறு மாதமாக இருக்கும்போது அவனை என்னிடம் கொடுங்கள், அவனுக்கு பத்து வயதாகும் போது வந்து பாருங்கள்; அவனால் படிக்க, எழுத, மற்றும் வேறு எதையும் செய்ய முடியும். அவன் ஒரு மனிதன், அவனுக்காக இயேசு கிறிஸ்து மரித்தார்." நாம் இங்கே இந்த பெரிய நகரங்களில் உள்ள சபைகளிலும், பெரிய அழகான சபைகளுடனும் இந்த அனைத்து காரியங்களுடனும், ஒரு சில மக்களுக்காக இப்படிப் போராடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒருபோதும் கேள்விப்படாத லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அது சரிதான். ஓ, அது ஒரு பரிதாபம். யாராவது அந்தத் தரிசனத்தைப் பெற்றுச் செல்லுங்கள், அது... அவர்களிடம் செல்லுங்கள். இயேசு சொன்னார், "நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." இப்போது, அவர்கள் அங்கே அறிய விரும்புவது சுவிசேஷத்தைத்தான், வெறும் வார்த்தையை மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையையும் அதன் வெளிப்பாட்டையும் தான். 9 அங்கே கூட்டத்திற்குள் வந்தவர்களை நான் சந்தித்தேன், அவர்கள் இரத்தத்தால் தெளிக்கப்பட்ட மண் சிலைகளைச் சுமந்து வந்தார்கள். வீதியோரமாக நடந்து வரும்போது, டர்பன் நகர மேயர் சிட்னி ஸ்மித் நாங்கள் இருந்த இடத்தை காண்பித்துக் கொண்டி ருந்தார்... வீதிகளும் குன்றுகளும் எங்கும் மக்களால் நிறைந்திருந்தன. அவர் சொன்னார்... நான் சொன்னேன், "அந்தச் சிலைகளுடன் இருக்கும் ஆட்களைப் பாருங்கள். அவர்கள் கழுத்தைச் சுற்றி தொங்கிக்கொண்டிருக்கும் அந்த அடையாள அட்டை என்ன?" "அது கிறிஸ்தவர்கள்." நான் கேட்டேன், "சிலையுடன் இருக்கிறார்களா?" அவர் சொன்னார், "ஆம், அவர்கள் சிலைகளையும் சுமக்கிறார்கள்." நான் சொன்னேன், "சரி, இது விசித்திரமாக இருக்கிறதே." நான் கேட்டேன், "அங்கே நிற்கும் அந்த நபரின் மொழியை உங்களால் பேச முடியுமா?" அவர் சொன்னார், "ஆம், அவன் ஒரு ஜூலூ." நான் அவனிடம் சென்றேன், நான் அவனைக் கேட்டேன்; அவனால் ஆங்கிலம் பேச முடியாது, நிச்சயமாக. நான் கேட்டேன், "நீ ஒரு கிறிஸ்தவனா?" "ஆமாம்." அவன் ஒரு கிறிஸ்தவன். நான் கேட்டேன், "சரி, நீ எதற்காக அந்தச் சிலையைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?" 10 "ஓ," அவன் சொன்னான் அவனுடைய-அவனுடைய-அவனுடைய அப்பா அதைச் சுமந்தார் என்று. இப்போது, ஒரு நாள் சிங்கம் தன் அப்பாவைத் துரத்தியதாகவும், அவர் அந்த-அந்தச் சிறிய சிலையை கீழே வைத்துவிட்டு, நெருப்பை மூட்டி, சூனியக் காரன் தனக்குச் சொன்ன அந்தச் சிறிய மந்திரத்தைச் சொன்னதாகவும், சிங்கம் ஓடிவிட்டதாகவும் அவன் சொன்னான். அவன் சொன்னான், "சரி, அமோயா தவறினால் (அவர்தான் கடவுள், காணப்படாதவர். 'அமோயா' என்ற வார்த்தைக்கு 'காற்று' என்று அர்த்தம். நாங்கள்..." அவர்கள் சொல்கிறார்கள், "காற்றைப் போல காணப்படாத சக்திக்கு நாங்கள் ஜெபிக்கிறோம்). அவர் தவறினால், இது தவறாது." இப்போது, அது கிறிஸ்தவம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும், இல்லவே இல்லை. சரி, நான் சொன்னேன், "நானே ஒரு வேட்டைக் காரனாக இருப்பதால், சிங்கம்... நீங்கள் சொன்ன ஜெபம் ஒருபோதும் சிங்கத்தை விரட்டவில்லை; அது ஒருபோதும் சிங்கத்தை பயமுறுத்தவில்லை. நீங்கள் மூட்டிய நெருப்புதான் சிங்கத்தை விரட்டியது. பாருங்கள், அது நெருப்பைப் பார்த்து பயந்துவிட்டது." 11 ஆனால் அன்று மதியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய உயிர்த் தெழுதலின் வல்லமையில் அவர்கள் கண்ட போது, அந்த மேடையின் குறுக்கே ஒரு மனிதன் வந்தபோது... டர்பனில் மேடையில் ஏறிய முதல் நபர், ஒரு-ஒரு சிறிய-ஒரு முகமதியப் பெண். அவளுடைய கண்களுக்கு நடுவே ஒரு சிவப்புப் பொட்டு இருந்தது. அதற்கென்ன அர்த்தம் என்று தெரிந்த மிஷனரிகள் ஒருவேளை இப்போது இங்கே அமர்ந்திருக்கலாம். அவர்கள் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள்; அவர்கள் பூசாரியால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், இயேசு கிறிஸ்துவை நிராகரித்து, முகமதிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளம். அவள் மேடையில் நின்றபோது... எங்களிடம் சுமார் பதினைந்து மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். அதனால் வித்தியாசமான, பதினைந்து மொழிகள்... நகரத்தின் பல வீதிகளில் உங்கள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை மக்களாகவே இருந்தார்கள், எங்கும் மக்கள். பிறகு, அவர்கள் அங்கே நிர்வாணமாக, பல்வேறு வகையான நிலைமைகளில் கிடந்தார்கள், பல்வேறு பழங்குடியினர். பழங்குடியினர் ஒருவரோ டொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதபடி அவர்கள் வேலிகட்டிப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். 12 காட்டிற்கு வெகு தொலைவில் இருந்து அவர்களை அழைத்துவந்த மிஷனரிகளும் மற்றவர்களும், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். "நீங்கள் நீண்ட காலம் தங்குவீர்கள் அல்லது நீண்ட காலம் அங்கே இருப்பீர்கள் என்று நினைத்தேன்." நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே அங்கே இருந்தோம். பின்னர்... அன்று மதியம், முதல் பெண் மேடையில் வந்தாள். நான் சொன்னேன், "நிச்சயமாக உனக்குத் தெரியும் என்னால் உன்னைக் குணப்படுத்த முடியாது என்று." மொழி பெயர்ப்பாளர்... ஆனால் நான் சொன்னேன், "உன்னுடைய வாழ்க்கையை உன்னால் மறைக்க முடியாது." நான் கேட்டேன், "அப்படியானால் ஏன், ஒரு முகமதியராக இருந்தும், நீ ஏன் ஒரு கிறிஸ்தவனாகிய என்னிடம் வந்திருக்கிறாய்?" அவள் (நிச்சயமாக மொழிபெயர்ப்பாளர் மூலமாக) சொன்னாள், "நான் நம்புகிறேன்..." என்னால் அவளுக்கு உதவ முடியும் என்று அவள் நம்பினாள். நான் சொன்னேன், "ஆனால் ஏன்-நீ ஏன் கோவிலில் இருக்கும் உன் பூசாரியிடம் செல்லக்கூடாது?" இல்லை, நான் அவளுக்கு உதவ வேண்டும் என்று அவள் விரும்பினாள். நான் சொன்னேன், "சரி, நான் ஒரு கிறிஸ்தவன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்." அவளும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாள், ஆனால் தேவனுடைய குமாரனாக அல்ல. அவள் வெறும்... முகமதியர்கள், அதாவது இஸ்மவேலின் பிள்ளைகள் (பாருங்கள்?), அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள். ஆனால் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. முகமது தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவர்கள் சொல்கிறார்கள். தினமும் காலையில் அவர்கள் இந்த மிகப்பெரிய மணியை அடிக்கிறார்கள். பூசாரி வெளியே வந்து, "உண்மையான மற்றும் ஜீவனுள்ள ஒரே தேவன் இருக்கிறார், முகமது அவருடைய தீர்க்கதரிசி" என்று சத்தமிடுகிறார். உண்மையான மற்றும் ஜீவனுள்ள ஒரே தேவன் இருக்கிறார் என்றும் கிறிஸ்து அவருடைய குமாரன் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். புரிகிறதா? எனவே, நாம்... 13 அப்போது அவர்கள் அவளுக்குச் சொன்னார்கள். பரிசுத்த ஆவியானவர் வந்து அவளிடம் பேசத் தொடங்கினார், அவளுடைய கணவன் யார், அவனுடைய பெயர் என்ன என்பதை முகமதிய மொழியில் அவளிடம் சொன்னார். மேலும் அதற்கு முந்தைய நாள் அவன் எங்கே இருந்தான், அவன் தன் மனைவிக்கு என்ன செய்தான், அவள் எந்த மருத்துவரிடம் சென்றாள் என்பதையும் அவனிடம் சொன்னார். அங்கிருந்த அந்த முகமதியர்கள் "கிருஷ்ணா" என்று கத்தத் தொடங்கினார்கள். அது அவர்களின் அவதாரக் கடவுள், ஏனென்றால் நான் "கிறிஸ்து" என்று சொல்வதை அவர்கள் கேட்டார்கள். அதனால் கிருஷ்ணனின் அவதாரம் என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே நீங்கள் அதைக் கவனிக்க வேண்டும். நான் சொன்னேன், "இல்லை, நான் ஒருபோதும் "கிருஷ்ணா" என்று சொல்ல வில்லை. நான் கிருஷ்ணனும் அல்ல. நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன், கிருஷ்ணன் அல்ல." அதனால் அவர்கள் அதை மீண்டும் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் சொல்ல வேண்டியிருந்தது. பிறகு அந்தப் பெண், அவள் தலைவணங்கினாள். எடுத்தாள்... அவளுடைய ஆடைகள் கீழே தொங்கிக்கொண்டிருக்க, தன் கண்களுக்கு நடுவிலிருந்த சிவப்புப் பொட்டை அழித்துவிட்டு ஒரு கிறிஸ்தவளாக மாறினாள். எனவே பிறகு... ஒரு முகமதியருக்கு இது விசித்திரமானது. எனவே பிறகு, மேடையை விட்டுச் சென்றாள். 14 அடுத்ததாக வந்தவள் ஒரு வெள்ளை யினப் பெண். அவள் வந்தாள், அவள் எங்கே இருக்கிறாள், அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவளிடம் சொல்லப்பட்டது, கருப்பையில் ஒரு சிறிய கட்டி மட்டும்தான், ஆனால் "மரணத்திற்குத் தயாராகு, ஏனென்றால் நீ சிறிது காலம் மட்டுமே வாழப்போகிறாய்" என்று கூறப்பட்டது. அவள் ஒரு கிறிஸ்தவள். இப்போது, நான் ஒரு குணமாக்குபவனாக இருந்திருந்தால், அந்தப் பெண்ணைக் குணமாக்கியிருப்பேன். கடந்த வாரம் பல முறை, மக்களின் மேல் மரணத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் ஜெபத்தால் அதை மாற்ற முடியும். ஆனால் இந்த முறை அப்படி அல்ல, தேவன் அதைச் சொல்லியிருந்தார். நான் மரண ஊர்வலத்தைப் பார்த்திருந்தேன். அது முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும். நான் சொன்னேன், "மரணத்திற்குத் தயாராகு, ஏனென்றால் நீ சிறிது காலம் மட்டுமே வாழப்போகிறாய்." அவள் கேட்டாள், "உங்களுக்கு அது எப்படித் தெரியும்?" நான் சொன்னேன், "சரி, உனக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்த அதே அவர்தான்." அவள் அப்படியே செய்து, மேடையை விட்டு இறங்கி நடந்து, அமர்ந்தாள், சுமார் பத்து நிமிடங்களில், அவள் அங்கேயே சுருண்டு விழுந்து மரித்துப்போனாள். அவர்கள் அவளை எடுத்துச் சென்றார்கள். புரிகிறதா? பாருங்கள், என்னால் முடியவில்லை... இப்போது நான்-நான் குணமாக்குபவனாக இருந்திருந்தால், அவளைக் குணமாக்கியிருப்பேன். ஆனால் அவர் என்னிடம் சொல்லச் சொல்வதை மட்டுமே என்னால் சொல்ல முடியும். புரிகிறதா? 15 அடுத்ததாக ஒரு சிறுவன் வந்தான். அவன் அங்கே நின்றுகொண்டிருந்தான். அவன் ஒரு-ஒரு ஜூலூ. அவர்கள்... இப்படி தங்கள் காதுகளை அறுத்து பெரிய, நீளமான துவாரங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் நிறைய-நிறைய காதணிகளை அணிகிறார்கள். பெண்கள் நிறைய சாயம் பூசிக் கொள்கிறார்கள். ஆகவே சாயம் பூசிக் கொள்ள விரும்பும் பெண்களே, அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு புறஜாதியாரின் வழிபாடு. அது முற்றிலும் சரிதான். அதை உங்களிடமிருந்து விலக்கி வையுங்கள். அது கிறிஸ்தவர்களுக்குத் தகுதியற்றது. [சபையார் கரகோஷம் செய்கிறார்கள்] நன்றி. நான் சற்று ஆச்சரியப்பட்டேன். சில வருடங்களுக்கு முன்பு நான் பெந்தெகொஸ்தே மக்களை முதன்முதலில் அறிந்தபோது, அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் எங்கேயோ ஏதோ நடந்துவிட்டது. அது சரியா? 16 இப்போது, உங்கள் போதகர்கள் உங்களுக்கு இதைக் கற்பிக்க இங்கே இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் பெண்களே, முழு பைபிளிலும் சாயம் பூசிக்கொண்ட ஒரே ஒரு பெண்மணிதான் இருந்தாள். தேவனைச் சந்திப்பதற்காக நீங்கள் சாயம் பூசுவதில்லை. ஆண்களைச் சந்திப்பதற்காகவே நீங்கள் அதைப் பூசுகிறீர்கள். யேசபேலும் அதையே செய்தாள். தேவன் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். நிறைய சாயம் பூசிய ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால், "எப்படி இருக்கிறீர்கள், மிஸ் நாய் மாமிசமே?" என்று சொல்லுங்கள். அதைத்தான் தேவன் அவளை ஆக்கினார்: நாய் மாமிசமாக, அவளை நாய்களுக்குக் கொடுத்தார். அது சரிதான். ஆம், ஐயா. "எப்படி இருக்கிறீர்கள்..." மேலும் நிறைய பெண்கள் சிகரெட் பிடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஓ, என் தேவனே. நீங்கள் செய்யக்கூடிய மிக மட்டமான காரியம் அதுதான். நான் இதைப் பற்றி அமைதியாக இருப்பதே நல்லது. எனவே எப்படி இருந்தாலும், போதகர்கள் உங்களுக்கு அதைச் சொல்வார்கள். 17 இப்போது, மீண்டும் இதற்கு வரு வோம்... இந்தப் புறஜாதிகள், அவர்கள் சாயத்தை எடுத்து தங்களின் உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள், களிமண்ணால் அதைச் செய்கிறார்கள். செய்கிறார்கள்... தலைமுடியை அலங்கரிக்கிறார்கள், அதை நீங்கள் என்ன சொல்வீர்களோ, சிறிய களிமண் உருண்டைகளை இப்படி வைத்து அதில் எலும்புகளை செருகுகிறார்கள். அப்பாடா, ஒரு பெண் ணுக்கான அழகுக்கலை நிபுணர் ஆப்பிரிக்காவில் ஒரு பழமையான விஷயம். அது அவர்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே இருந்தது. எனவே எப்படி இருந்தாலும், தங்கள் உதடுகளைப் பிளக்கிறார்கள் மற்றும் பலவற்றைச் செய்கிறார்கள். பிறகு இந்த காதணிகளை உருவாக்குகிறார்கள்; அவர்களிடம் சில நிரந்தர காதணிகள் இருந்தன. அவர்கள் சதையை அறுத்து அதில் மரத்துண்டுகளைச் செருகி வைக்கிறார்கள், அவர்களுடைய காதுகள் விரிக்கப்பட்ட சதையிலிருந்து வளையங்கள் அப்படி கீழே தொங்கும். இந்தச் சிறுவன் ஒரு ஜூலூ, அவர்கள்... அவர்களின் உணவு முறை, அவர்கள் தங்கள் இரவு உணவை தங்களுடன் எடுத்துச் செல்லும்போது, அவர்களிடம் ஒரு மாடு இருக்கும். இந்த மாடு... ஒரு மனிதனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் ஒரு பையன்-ஒரு பையன் மற்றும் ஒரு பெண் என்றால், அவன் பையனைக் கொன்றுவிடுவான், பெண்ணைக் காப்பாற்றுவான், ஏனென்றால் அந்தப் பெண்ணுக்காக அவனால் ஒரு மாட்டைப் பெற முடியும். அந்தப் பெண்ணை நீங்கள் எந்த வயதிலும் விலைக்கு வாங்கலாம். அவள் பருவமடையும் வரை அவளுடன் மனைவியாக நீங்கள் இருக்க முடியாது, ஆனால் நீங்கள்-நீங்கள் அவளை விலைக்கு வாங்கலாம். பிறகு அந்த மாடு, அவர்கள் மாட்டைக் கொண்டே வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு முள்ளம்பன்றியின் முள்ளை எடுத்து கழுத்து நரம்பைத் துளைத்து, மிருகத்தின் தோலால் செய்யப்பட்ட ஒரு சிறிய தோல் பையைப் போன்ற ஒரு சிறிய பையில், பாதியளவு இரத்தத்தை வடிகட்டுகிறார்கள், பிறகு மீதியளவு பாலால் நிரப்புகிறார்கள், அதன் பிறகு பாலும் இரத்தமும் சூடாக இருக்கும்போதே, அவர்கள் அதை ஒரு குச்சியால் கடைகிறார்கள், அது ஒரு லாலிபாப்பை உருவாக்குகிறது. அதைத்தான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். 18 ஆகவே, இந்தச் சிறுவன் அப்போதுதான் தன் உணவைச் சாப்பிட்டிருந்தான், அவன்... மேலும் அவர்கள் அதைக் காயவைக்கவும் செய்வார்கள், அது பில்தாங் என்று அழைக் கப்படுகிறது. அதனால் அவர்கள்-அவர்கள்-அவர்கள் அந்த லாலிபாப்பையும் புதிய இரத்தத்தையும் நக்குகிறார்கள், நிச்சயமாக, தன் நாக்கினால் அதைச் சூடாக்குகிறான், அவனுடைய சிறிய வயிறு முழுவதும் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு இரத்தமாக இருந்தது. அவன் அங்கே நின்று கொண்டிருந்தான், அந்தப் பாவப்பட்ட சிறுவன் மிகவும் மாறுகண்ணனாக இருந்தான், அவனுடைய கண்கள் அப்படி நேராக உள்ளே பொருந்தியிருந்தது. சரி, நான் சொன்னேன், "அந்தப் பையனுக்கு மாறுகண் என்பது எவருக்கும் தெரியும்." நான் இப்படிச் சொல்வதுபோல, "சக்கர நாற்காலியில் யாரோ இருக்கிறார்கள். அந்தப் பெண் முடமாக இருக்கிறாள்." சரி, அது எவருக்கும் தெரியும். இதில் உள்ள ரகசியம் என்னவென்றால்,-ஒரு ஆரோக்கியமான நபரைப் பார்த்து, பிறகு அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிவதுதான் அந்த ஆச்சரியம். புரிகிறதா? ஆனால் சொன்னார்கள், "அந்த-அந்தப் பையனைப் பற்றி என்ன?" நான் சொன்னேன், "யார் பார்த்தாலும் தெரியும்." அவர்கள் ஆப்பிரிக்க மருத்துவர்களால் அனுப்பப் பட்டிருந்தார்கள். அங்கு செய்யப்பட்ட முதல் காரியம், முதல் இரவு, காலை உணவிற்காக என்னை அழைத்தார்கள், ஆப்பிரிக்க மருத்துவச் சங்கம் எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்தது, ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையையும் மக்கள் வந்து ஜெபித்துக் கொள்ள திறந்துவிட்டார்கள். சரிதான். 19 பிறகு இந்தச் சிறுவன், அங்கே நின்றுகொண்டிருக்க, மேடையில் பல மருத்துவர்கள் இருந்தார்கள், அல்லது இந்த இடத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தார்கள். நான் சொன்னேன், "நிச்சயமாக, அவனுடைய சிறிய கண்கள்-மாறுகண்ணாக இருக்கிறது. அதை யார் பார்த்தாலும் தெரியும்." நான் சொன்னேன், "அது எப்படி நடந்தது என்பதை மட்டுமே நான் அறிந்திருக்கலாம். இந்தச் சிறுவன் அப்படி இருப்பதற்குக் காரணமான ஏதேனும் அவனுடைய வழியில் இருந்தால், நான்-தேவன் அதை எனக்குக் காண்பிக்கலாம், ஆனால் அவனைக் குணமாக்க, என்னால் முடியாது." நான் சொன்னேன், "இயேசு கிறிஸ்து அதை ஏற்கனவே செய்துவிட்டார்." நான் அந்தச் சிறுவனைத் திரும்பிப் பார்த்தபோது, ஒரு உயரமான, ஒல்லியான உள்ளூர் பெண்மணி ஒரு... குழந்தையைத் தன் கைகளில் பிடித்துக்கொண்டு தன் கணவனிடம் காண்பிப்பதைக் கண்டேன். நான் சொன்னேன், "இந்தக் குழந்தை மாறுகண்ணோடு பிறந்தது." 20 மேலும் அங்கே வெகு பின்னால், ஜூலூ மொழிபெயர்ப்பாளர் அதைச் சொன்னபோது, சரி, அங்கே வெகு பின்னால், அந்தத் தந்தையும் தாயும் எழுந்தார்கள். அது சரிதான். அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். நான் சொன்னேன், "அதுமட்டுமின்றி, அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதையும், ஆராதிப்பதையும் ஜெபிப்பதையும் நான் காண்கிறேன்." அந்தத் தந்தையும் தாயும் தங்கள் கையை அசைத்தார்கள்; அது உண்மையாக இருந்தது. சரி, நான் சொன்னேன், நிச்சயமாக அந்த... நான் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தேன், உங்களுடைய கண்கள் இருப்பதைப் போல அவனுடைய கண்களும் நேராக இருந்தன, எந்த ஜெபமும் இல்லை, வேறு ஒன்றும் இல்லை. அந்தச் சிறுவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான், என்னைப் பார்த்து, பெரிய சிரிப்புடன், அந்தப் பெரிய வாய், உங்களுக்குத் தெரியும், என்னை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் சொன்னேன், "இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கிறீர்களா?" நான் சொன்னேன், "அவனை நீங்கள் அங்கே பார்த்துக்கொண்டிருந்தீர்கள். நான் ஒருபோதும் அவனைத் தொடவில்லை. நான் அவனுக்கு பத்து அடி தூரத்தில் கூட இல்லை." தேவன் அவனைக் குணமாக்கினார். அவர்கள் கடந்து சென்றார்கள், அந்தச் சிறுவன். அந்த மனிதன் அவனைக் கடந்து கூட்டிச் சென்றான். நான் இப்படி என் முதுகைத் திருப்பினேன், அங்கே பின்னால் யாரோ முணுமுணுப்பதைக் கேட்டேன், நான் திரும்பிப் பார்த்தேன்; அது சகோதரர் போஸ்வொர்த், மற்றும் சகோதரர் பாக்ஸ்டர், அல்லது சகோதரர் போஸ்வொர்த், யாரோ ஒருவர், அவர்கள் பேசிக் கொண்டி ருந்தார்கள். 21 சுமார் முப்பத்தைந்து வயதுடைய, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த, மிகவும் புத்திசாலியான ஒரு இளம் பிரிட்டிஷ் மருத்துவர் இருந்தார். அவர் என்னிடம் வர விரும்பினார். அவர் சொன்னார், "சகோதரர் மேல் அபிஷேகம் இருக்கும்போது, யாரையும் அவரிடம் பேச நாங்கள் அனுமதிக்க முடியாது," என்றார். "அதுமட்டுமல்லாமல், இங்கே பாருங்கள், ஜெபம் பண்ணுவதற்காக சுமார் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் மக்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்," என்றார். "நாங்கள் அதைச் செய்ய முடியாது," என்றார். "நான் அவரிடம் பேச மட்டும் விரும்புகிறேன்," என்றார். எனவே நான் திரும்பி, "என்ன விஷயம், டாக்டரே?" என்றேன். அவர் ஒரு மருத்துவர் என்று எனக்குத் தெரிந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர், "நான் ஒரு மருத்துவர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார். நான் சொன்னேன், "சரி, நான்... நீங்கள்-நீங்கள் ஒரு மருத்துவர்." "அது சரிதான்," என்ற அவர், "ரெவரெண்ட் பிரன்ஹாம், நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்," என்றார். "அந்தச் சிறுவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றார். நான் சொன்னேன், "நான் ஒன்றுமே செய்யவில்லை." "நீங்கள் அந்தச் சிறுவனை ஹிப்னாடிசம் (மனவசியம்) செய்தீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "மருத்துவம் பார்க்க உங்களுக்கு லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் ஹிப்னாடிசத்தைப் பற்றி இதைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரியாதா?" நான் சொன்னேன், "ஹிப்னாடிசம் அந்தச் சிறுவனின் கண்களை நேராக்கும் என்றால், நீங்கள் ஹிப்னாடிசம் செய்ய ஆரம்பித்து, ஏதாவது வெற்றியை அடைவது நல்லது." 22 அவர், "சரி, அந்தச் சிறுவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றார். நான் சொன்னேன், "டாக்டரே, நீங்கள் அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தீர்கள். நான் அந்தச் சிறுவனின் பத்து அடி தூரத்திற்குள் கூட செல்லவில்லை." அவர் சொன்னார், "உங்கள் பேச்சு எப்படி மக்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் நீங்கள் மக்களின் மனதை வாசிப்பவராக இருந்து அவர்களின் எண்ணங்களை வாசிக்க முடியும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்." ஆனால், "அந்தச் சிறுவனின் கண்களை நேராக்கியதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்றார். உடனே சகோதரர் பாக்ஸ்டர், "ஐயா, நீங்கள் மேடையை விட்டு கீழே இறங்க வேண்டும்," என்றார். பார்த்தீர்களா? அப்படி. நான், "ஒரு நிமிடம் பொறுங்கள்," என்றேன். அவர், "ரெவரெண்ட் பிரன்ஹாம்..." என்றார். அங்கே பெரிய காலா லில்லி மலர்கள்... சகோதரிகளே, நீங்கள் காலா லில்லிகளைப் பற்றிப் பேசுகிறீர்களே, அவை அங்கே காட்டுச் செடிகளாக, குறுக்கே பதினெட்டு அங்குல அளவில், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் மிகவும் அழகாக வளரும். மேடையில் பெரிய தொட்டிகளில் அவற்றை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். 23 அவர் சொன்னார், "அந்த லில்லி மலர்களில் தேவன் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்." அவர், "அந்த லில்லிகளில் ஒரு-ஒரு தன்மை இருக்கிறது என்று நான்-நான் நம்புகிறேன்," என்றார். "ஆனால் அந்தச் சிறுவனின் கண்களை நேராக்கும் அளவுக்கு அது தொட்டு உணரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதை," அவர், "நான் அப்படிப் பார்க்கவில்லை," என்றார். நான், "டாக்டரே, அந்தச் சிறுவனின் கண்கள் நேராக இருக்கின்றன," என்றேன். அவர், "ஆம், கீழே அந்த வாசலின் வழியே அவனை அழைத்து வந்தது நான்தான். நான் கீழே அவனைப் பரிசோதித்தேன்," என்றார். அந்தச் சிறுவன் இன்னமும் மேடையில்தான் நின்றுகொண்டிருந்தான். "நான் இப்போதுதான் அவனைப் பரிசோதித்தேன்," என்றார். "அப்போது அவனுக்கு மாறுகண் இருந்தது. இப்போது அவனது கண்கள் மாறுகண்ணாக இல்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது?" என்றார். நான் சொன்னேன், "இயேசு கிறிஸ்து அவனைச் சந்தித்தார்." அது உண்மைதான். எனவே அவர்கள் அவரை அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள். அவர், "ஒரு நிமிடம்," என்றார். பெரிய மைக், இப்படி தொங்கிக்கொண்டிருந்தது. மொழி பெயர்ப்பதற்காகக் காத்துக்கொண்டு பல மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி கீழே அமர்ந்திருந்தார்கள்... அவர் அந்த-அந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பாக அங்கே நடந்து வந்தார். "நான் இயேசு கிறிஸ்துவை என் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்," என்று அவர் அந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பாக அப்படியே கூறினார். 24 பிறகு அடுத்த நபர் வந்தார், அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சங்கிலியைப் பிடித்து அவர்கள் அவரை இழுத்து வந்தார்கள், அவர் அப்படி உடைந்து போயிருந்தார்... நான் அவரை ஒரு-ஒரு-ஒரு போர் நடனம் ஆடச் சொல்வேன் என்று அவர் நினைத்தார். அவரால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். நான் சொன்னேன், "இந்த மனிதர்..." நிச்சயமாக என்னால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால் நான் சொன்னேன், "இந்த மனிதர் பிறப்பிலேயே இந்த நிலைமையில்தான் பிறந்திருக்கிறார்." அவருக்கு சுமார் இருபது வயது இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் பார்ப்பதற்கு ஒருவேளை இருபத்தைந்து இருக்கலாம். அவருடைய பெற்றோர்கள் எழுந்து நின்றார்கள். அது சரியானது. ஆனால் நான் சொன்னேன்... இப்போது, அவருடைய கவனத்தை ஈர்த்த பிறகு. நான் சொன்னேன், "இப்போது, அவர் எதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்றால்... அவருக்கு தன்னைவிட இளைய ஒரு-ஒரு சகோதரன் இருக்கிறான், அவன் ஊன்றுகோல் போன்ற இரண்டு குச்சிகளை வைத்து நடக்கிறான், ஒரு ஆட்டின் மீது சவாரி செய்தபோது, ஆட்டின் மீது சவாரி செய்தபோது அவன் காயமடைந்தான். அந்த-அந்த ஆடு அவன் மீது ஏறி மிதித்ததோ அல்லது வேறு ஏதோ நடந்ததால் அது அவனை முடமாக்கிவிட்டது." ஆனால் நான் சொன்னேன், "நான் இப்போது அவனைப் பார்க்கிறேன், அவன் குணமடைந்துவிட்டான்." அங்கிருந்து கீழே, சுமார் இரண்டு தெருக்கள் தள்ளி, இதோ அந்தச் சிறுவன் ஊன்றுகோல்களை தலைக்கு மேல் தூக்கியபடி, குதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், தன் முழு பலத்தோடும் கத்திக்கொண்டு ஓடி வருகிறான். அந்தச் சமயத்தில், அந்த மனிதருக்கு மேலே ஒரு நீல நிற நிழல் அசைவதைக் கண்டேன். ஒரு சில நொடிகள் அந்த நிழலையே கவனித்தேன், காங்கிரஸ் உறுப்பினர் அப்ஷா குணமடைந்ததைப் போலவே. அந்த மனிதர் இப்படி நேராக எழுந்து நிற்பதைக் கண்டேன். அவர் மனதளவில் கூட இயல்பாக இல்லை. ஆனால் அவர் தனது கைகளாலும் கால்களாலுமே நடந்தார். அவருடைய இடுப்புப் பகுதி உயர்ந்து நின்றது, அவருடைய முதுகு ஒருவித-ஒருவிதமான நோயால் அப்படி ஆகியிருந்தது. நான் கண்டேன்... நான் நினைத்தேன், "இதுதான் அந்த நேரம். இப்போதுதான் அந்த வேளை." நான் சொன்னேன், "எழுந்து நில்லும். இயேசு கிறிஸ்து உம்மை குணமாக்குகிறார்." நான் என்ன பேசுகிறேன் என்று அவருக்குத் தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளர் அதைச் சொன்னார். அவருக்கு அது புரியவில்லை. 25 நான் நடந்து சென்று, அவர் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பிடித்துக்கொண்டேன். நீங்கள் ஒரு நாயை அழைத்துச் செல்வது போலத்தான் அவரை அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. நான் அவர் சங்கிலியைப் பிடித்துக்கொண்டேன். நான், "இயேசு உன்னை குணமாக்குகிறார்," என்றேன். அந்தச் சங்கிலியைப் பிடித்து மேலே இழுக்க ஆரம்பித்தேன், அவர் [சகோதரர் பிரன்ஹாம் செய்து காட்டுகிறார்] அவர் அப்படியே நின்றார், அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார், அவர் தன் சரியான சுயநினைவுடன் அங்கே நின்று சுற்றிலும் பார்க்கும்போது, அவருடைய கறுப்பு நிற வயிற்றின் மீது கண்ணீர் துளிகள் விழுந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் அங்கே அதைப் பார்த்தார்கள்... அது கட்டுக்கதை அல்ல; அது யெகோவா தேவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது ஒரு மனிதன் அல்ல. நான் அவர்களிடம் சொன்னேன்; நான் சொன்னேன், "அங்கே இருக்கும் உங்களில் எத்தனை பேர், நீங்கள் உள்ளூர்வாசிகள்... இவன் உங்கள் உள்ளூர்ப் பையன்." நான் சொன்னேன், "இந்த தேசத்தில் உள்ள உங்களில் எத்தனை பேர்... உள்ளூர்வாசிகளாகிய உங்களில் எத்தனை பேர்... உங்கள் மண் சிலைகளில் எது இந்த மனிதனுக்கு இந்த நிலையைத் தர முடியும்?" நான் சொன்னேன், "ஒன்று கூட இல்லை. முகம்மதியர்களே, இந்துக்களே உங்களுக்குச் சொல்கிறேன்..." நான் சொன்னேன், "கோவில் பூசாரிகளில் யார் இவருக்கு இப்படிப்பட்ட முழுமையான சுகத்தைத் தர முடியும்?" நான் சொன்னேன், "அவர்களில் ஒருவராலும் முடியாது, என்னாலும் முடியாது. ஆனால் பரலோகத்தின் தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பி யிருக்கிறார், அவர்தான் இப்படிப்பட்ட முழுமையான சுகத்தை இவருக்குக் கொடுத்திருக்கிறார்." 26 நான் கேட்டேன், "உங்களில் எத்தனை பேர் அவரைத் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?" அவரை ஏற்றுக்கொள்வதற்காக முப்பதாயிரம் பேர் எழுந்து நின்றார்கள். அவர்கள்... அவர்களில் சிலர் ஓடி வந்து, "சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் அதை மறுபடியும் சொல்வது நல்லது," என்றார்கள். "அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அது சொல்லப்படட்டும்," என்றார்கள்... சகோதரர் பாக்ஸ்டர், "சகோதரர் பிரன்ஹாம், அவர்கள் சரீர சுகத்தைத்தான் நினைத்தார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார். நான் சொன்னேன், "நான் சரீர சுகத்தைக் குறிக்கவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் உண்மையைத்தான் பேசுகிறேன் என்பதை நீங்கள் முழுமையாக நம்பி, மற்ற காரியங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, இப்போது இயேசுவை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைத்தான் நான் குறிக்கிறேன். உங்களில் யார் உண்மையாகவே மனப்பூர்வமாக இருக்கிறீர்களோ... அவர்கள் மிகவும்... உள்ளூர்வாசிகளாகிய நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், உங்கள் சிலைகளை தரையில் போட்டு உடையுங்கள். முகம்மதியர்களாகிய நீங்கள் உண்மையான வர்களாக இருந்தால், உங்கள் கண்களுக்கு மத்தியில் இருக்கும் சிவப்புப் பொட்டை அழித்துவிடுங்கள்." அவர்கள் தங்கள் சிலைகளை உடைத்தபோது அது ஒரு புழுதிப் புயலைப் போல இருந்தது. முப்பதாயிரம் புறஜாதியினர் ஒரே நேரத்தில் இயேசு கிறிஸ்துவைத் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் சிலருக்கு வலது கை எது, இடது கை எது என்று கூடத் தெரியாது. 27 நான் சொன்னேன், "காத்திருக்க வேண்டாம். நீங்கள்-ஏதோ ஒரு வெள்ளையின மனிதன் வந்து உங்களுக்கு நிறைய இறையியலைக் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டாம். அப்படிச் செய்யாதீர்கள். ஆனால் இப்போது உங்களை குணமாக்கிய இதே வல்லமையை, இதே இயேசுவை எடுத்துக்கொண்டு, ஒரு வெள்ளையின மனிதனால் செல்ல முடியாத காடுகளுக்குள் நீங்கள் செல்லுங்கள். அங்கே சென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை அவர்களுக்குப் பிரசங்கியுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் மீது உங்கள் கைகளை வையுங்கள், அவர்கள் குணமடைவார்கள்." ஆயிரக்கணக்கானோர்... அன்று இரட்சிக்கப் பட்ட ஒரு படிக்காத புறஜாதி மனிதன், பல வாரங்களாக, வாரத்திற்கு சராசரியாக ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். அது உண்மைதான். அதுதான். தேவன் அதைத்தான் செய்ய விரும்புகிறார், இந்த ஒருவரைப் படிக்க வைத்து அவரை அங்கே அனுப்புவது அல்ல, ஆரம்பத்தில் அவரைப் பார்த்து மக்கள் கொஞ்சம் சந்தேகப்படுவார்கள், ஆனால் உயிர்த்தெழுதல், வல்லமை மற்றும் நீங்கள் அதைப் பார்க்கும் விதத்தில் நடக்கும் செயல்களின் செய்தியை எடுத்துச் சென்றால், அவர்கள் அது வெளிப்படுவதைக் காணும்போது அது சுவிசேஷத்தை எல்லா இடங்களிலும் கொண்டு செல்லும். ஆமென். 28 இவையெல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்பது என் எண்ணமல்ல. ஆனால் நான் நினைக்கிறேன், அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். சரி. தேவனுடைய உதவியாலும் கிருபையாலும், இன்று மதியம் உங்களின் நிதியுதவி அப்படிப் பட்ட ஒரு திட்டத்திற்குத்தான் நிதியளிக்கப் போகிறது, மக்களைக் கொண்டுவருவதற்கு. எனக்குத் தெரிந்தவரை, இல்லை... அது என் கூட்டமாக இருக்கவில்லை; அது அவருடைய கூட்டம். நான் அங்கே இருந்ததால் அல்ல; அவர் அங்கே இருந்ததால். பார்த்தீர்களா? அவர் அங்கே இருந்தார். இப்போது, தேவனுடைய உதவியுடன், நான் சீக்கிரமாகவே திரும்பச் செல்லப் போகிறேன். அதற்காகத்தான் நான் இப்போது நிதியைச் சேகரிக்கிறேன், என்னால் எவ்வளவு பெற முடியும் என்று பார்க்க. எங்களால் முடியாது... செல்வதற்குத் தேவையான அளவு எனக்குக் கிடைக்கும்போது, நான் செல்வேன். நான் அதிலிருக்கும் ஒவ்வொரு பைசாவையும், எல்லாவற்றையும் (அது உண்மை என்று தேவனுக்குத் தெரியும்), ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தொலைதூர இடங்களுக்குப் செல்லும் அது போன்ற கூட்டங்களுக்கே பயன்படுத்து கிறேன். ஒரு மனிதனை ஒருபோதும் பார்த்திராத இடமான ஆஸ்திரேலியாவிற்கு நான் இப்போது செல்கிறேன். 29 பிக்டரி ஆளுநரிடமிருந்து வந்த சகோதரர் மூரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் தங்களின் நடனங்கள் மற்றும் காரியங்களைச் செய்யும்போது அங்கே அவர்கள்-அவர்கள் செய்வதை அவர் பார்த்திருக்கிறார். அவர்கள் தங்கள் சொந்தக் கூட்டத்திற்கு வெளியே பார்த்த ஒரே விஷயம் ஒரு கங்காரு மட்டும்தான். மேலும் அவர்கள்-அவர்கள் கங்காருக்களைப் போலவே குதித்து நடந்துகொள்கிறார்கள். அது உண்மைதான். ஒரு கங்காருவைப் பிடித்து, அதன்-அதன் குடலை மட்டும் வெளியே எடுத்துவிட்டு, தோலோடு அப்படியே அதை நெருப்பில் வீசி, உள்ளே குதித்து அது பாதி வெந்ததும், தோலோடு அப்படியே அதை சாப்பிடத் தொடங்கிவிடுவார்கள். இயேசுவின் நாமத்தையே ஒருபோதும் கேட்டிராத மக்கள் அங்கே இருக்கிறார்கள். இன்று மதியம் இந்த பீனிக்ஸ் நகரத்தில் காடிலாக் கார்களில் பயணம் செய்து நடமாடிக்கொண்டிருக்கும் மக்களுக்காக இயேசு கிறிஸ்து மரித்தது போலவே, அந்த மனிதனுக்காகவும் அவர் மரித்தார். அல்லேலூயா. 30 ஓ, விடியற்காலத்திற்கு சற்று முன்பு, இப்போது இந்த பூமியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வருகையின் செய்தியை அறிவியுங்கள். இதோ பாருங்கள், அத்தி இலைகள் இப்போது பச்சையாகி வருகின்றன. ராஜ்யத்தின் சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்திலும் பரவி வருகிறது, நாம் நெருங்கிவிட்டோம், முடிவைக் காண முடிகிறது. ஆமென். எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுக்காகத் தமது ஜீவனை மீட்கும்பொருளாகக் கொடுத்து, கீழே இறங்கி வந்து பாவ வாழ்க்கையிலிருந்து எங்களை இரட்சித்து, அந்த மகா பெரிய நாளில் ஒரு புதிய சரீரத்தில் எங்களை உயிர்த்தெழச் செய்து, நாங்கள் இனி ஒருபோதும் வியாதிப்படாமலும், முதுமையடையாமலும் அல்லது மரிக்காமலும் இருக்கும் அந்தப் பூரண நிலைக்கு எங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக உமது அன்பான குமாரனாகிய இயேசுவுக்காய் உமக்கு நன்றி செலுத்த உமது சமூகத்தில் நாங்கள் தலைவணங்குகிறோம்... தேவனே, வரவிருக்கும் அந்தப் பெரிய உயிர்த்தெழுதலில் நாங்களும் சேர்க்கப் பட்டிருக் கிறோம் என்பதை அறிவது எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. உமக்கு ஸ்தோத்திரம். இப்பொழுதும் ஆண்டவரே, நாங்கள் வேதாகமத்தைத் திறக்கப் போகும்போது, உமது கலப்படமில்லாத வார்த்தையாக, நாங்கள் இப்போது பேசுவதற்கான வார்த்தைகளை நீர் எங்களுக்குத் தர வேண்டும் என்று ஜெபிக்கிறோம். மேலும் அவை உண்மையான நல்ல நிலத்தில் விழுந்து நூறுமடங்கான பலனைக் கொடுக்கட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 31 இப்போது, அவருடைய வார்த்தையை வாசிப்பதற்காக, நான் வாசிக்க விரும்புகிறேன்... நான் உங்களை அதிக நேரம் காக்க வைக்க மாட்டேன். நான் உங்களை அதிக நேரம் காக்க வைக்க மாட்டேன் என்பதை உறுதிப்படுத்த என் கடிகாரத்தை இங்கே வைக்கப் போகிறேன். நீங்கள்... என்றால் முப்பத்தைந்து நிமிடங்கள் போதுமான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான்-நான் ஒரு பிரசங்கி அல்ல; அதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். முழுச் சுவிசேஷ மக்களைச் சந்தித்ததிலிருந்து நான் ஒருபோதும் அப்படி உரிமை கொண்டாடியதில்லை. அது எப்படியென்றால், ஒருமுறை நான் வீட்டில் இருந்தபோது என்னை ஒரு கௌபாய் என்று நினைத்துக்கொண்டேன். அதைப்பற்றி நான் உங்களுக்குச் சொன்னேன் என்று நம்புகிறேன். ஆனால் உண்மையான ஒரு கௌபாயைப் பார்த்தபோது, நான்-நான் அப்படி இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். கிழக்கே இருந்த அந்தப் பழைய உழவு குதிரைகளை என்னால் ஓட்ட முடிந்தது, ஆனால் இங்கே உங்கள் கட்டுப்பாடற்ற குதிரைகளை என்னால் ஓட்ட முடியவில்லை. அது வேடிக்கையாக இருக்கிறது. 32 சரி இப்போது, யோவேல் 1-ம் அதிகாரம், யோவேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில். இயேசு முதல் முறையாக வருவதற்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது முதல் வருகைக்கு முன்பு. ... யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளை களுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள். பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. இப்போது, யோவேலின் 2-ம் அதிகாரத்தில், ஒரு உரையைத் தொடங்குவதற்கு அது ஒரு இருண்ட படம். ஆனால் நான் அதை இன்னும் கொஞ்சம் முன்னால் கொண்டு செல்ல விரும்புகிறேன். 2-வது அதிகாரம் 25-வது வசனம், இங்கேதான் அவர் அந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார், இதை அடிப்படையாகக் கொண்டுதான் எனது செய்தியைக் கொடுக்க விரும்புகிறேன். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக் கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த ... தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. 33 இப்போது, கர்த்தர் இந்த வார்த்தைக்கான தமது ஆசீர்வாதங்களைக் கூட்டிக் கொடுப் பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் சித்தமானால், அடுத்த சில நிமிடங்களுக்கு நீங்கள் உங்கள் கவனத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது நான் எனது சிந்தனைகளை முடிவின் காலத்தின் மீது அமைக்க விரும்புகிறேன். நாம் அதைப் பார்ப்பதற்கு முன்பாகச் சிந்திக்கத் தொடங்குவோம்... நீங்கள் இங்கே வெளியே சென்றால்... உங்களில் பலர் இங்கே விவசாயிகளாக இருந்து, கோதுமை, வாற்கோதுமை மற்றும் பிற விவசாயங்கள்... சூரியனின் இந்தப் பள்ளத்தாக்கில் பயிர்கள், மற்றும் லெட்டூஸ் கீரை மற்றும் பல சிறப்பான பொருட்களை விளைவிக்கிறீர்கள்... இங்கே உள்ள இந்தப் பள்ளத்தாக்குதான் நாட்டிலேயே மிகவும் செழிப்பான பள்ளத்தாக்குகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். எனவே, உங்களுக்கு அது பரிச்சயமான ஒன்றாக இருக்கும், அதாவது, நீங்கள் எந்த வகையான விதையை நிலத்தில் விதைக்கிறீர்களோ, அந்த வகையான விளைச்சலைத்தான் நீங்கள் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 34 எனவே, இன்று நாம் சுற்றிலும் பார்த்தால், இன்று உலகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்தால்... இன்று உலகம் எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய குழப்பத்திலும், ஒரு பெரிய-அர்த்தமற்ற காரியங்களிலும் மூழ்கியிருக்கிறது. இவை யெல்லாம் எங்கிருந்து வந்தன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம், குறிப்பாக சபையின் வாழ்க்கையில். நாம் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், பெரும்பாலும் அதையே நாம் கவனிப்போம், எப்படி பலவிதமான யோசனைகள், பலவிதமான எண்ணங்கள், சுவிசேஷத்தை அணுகுவதில் பலவிதமான கோணங்களைக் கொண்ட இவ்வளவு மக்கள் இருக்க முடியும்: ஒவ்வொருவரும் தாங்கள்தான் முற்றிலும் சரியானவர்கள் என்றும் மற்றவர் தவறானவர் என்றும் உரிமை கொண்டாடுகிறார்கள். யாராவது அப்படிச் செய்வதை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பீர்கள்... வேதாகமம் சொல்கிறது, "ஒருவன் தனக்கு ஏதேனும் தெரியுமென்று நினைத்துக்கொண்டால், அவன் அறியவேண்டியதொன்றையும் இன்னும் அறியவில்லை." 35 உங்களில் சிலர் என்னோடு கொஞ்சம் பின்னோக்கி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கும் சுமார் நாற்பது வயது வரையிலான முதியவர்கள் சிலர், என்னோடு அடுத்த இருபது வருடங்கள் பின்னோக்கி வாருங்கள். முந்தைய இருபது வருடங்களை விட கடந்த இருபது வருடங்களில் முன்னேற்றம் எவ்வளவு வேகமாக வந்திருக்கிறது, காரியங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதைப் பாருங்கள். மூன்றாவது இருபது வருடத் தொகுதியை விட இரண்டாவது இருபது வருடத் தொகுதியில் காரியங்கள் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டன என்பதைக் கவனியுங்கள். சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கும் குறைவான காலம் வரை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே மனிதன் கிட்டத்தட்ட பழமையான நிலையில்தான் இருந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? காரியங்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நாம் இந்த முனையிலிருந்து தொடங்குவது போல... 36 காலம் இப்படித்தான் தொடங்கியது. வாழ்க்கையின் முதல் ஆறாயிரம் ஆண்டுகளில், நாம் இப்படித்தான் நகர்ந்தோம். கடந்த நூறு வருடங்களுக்கு வரும் வரை நாம் கொஞ்சம்கூட மாறவில்லை, இப்போது நாம் அப்படி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன்? அதே மனத் திறன்களைக் கொண்ட அதே மனிதன்தான் நமக்கு இருக்கிறான். அக்காலத்தில் பூமியில் இருந்த ஒவ்வொரு அறிவியல் விஷயமும் அங்கேயே இருந்தது: இன்று அவர்கள் பயன்படுத்தும் அதே காரியங்கள்தான். அங்கே இருந்த அதே மூளையைக் கொண்ட அதே மனிதன்... அவனுக்கு இப்போது இருக்கும் அதே மூளைதான் அப்போதும் இருந்தது. ஆனால் திடீரென்று ஒன்று நடந்தது, அல்லவா? இந்த உலகம் இன்னும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு அணுகுண்டுப் போரை இந்த உலகத்தால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு ஹைட்ரஜன் குண்டுப் போரை இதனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. 37 அவர்கள் ரெனோவிலோ அல்லது நெவாடாவில் வெளியிலோ ஒன்றை வெடிக்கச் செய்யலாம், அதுபோல ஒரு சிறிய கையெறி குண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனால் நமக்கு இருக்கும் இந்தப் பொல்லாத எதிரி இங்கேயும், அங்கேயும் ஒன்றை வெடிக்கச் செய்து, அந்தத் தொடர் விளைவுகள் ஒன்றிணையுமானால் என்ன ஆகும்? போர் தொடங்கட்டும். அன்று நான் வானொலியில் கேட்டேன், உலக விஞ்ஞானிகளில் பெரும்பான்மை யானவர்கள், உலகம் முழுமையாக அழிந்து போவதற்குப் பத்து ஆண்டுகள் கெடு கொடுக்கிறார்கள். அது வேதரீதியாகப் பேசுவது அல்ல; அது அறிவியல் ரீதியாகப் பேசுவது: முழுமையான அழிவுக்குப் பத்து ஆண்டுகள். அது வேதாகமத்திற்கு முரணாக இருக்காது, வேதாகமம் சொன்னது போலத்தான். வானமும் பூமியும் அக்கினியாய் இருக்கும். இந்தப் பாலைவனங்கள் மற்றும் எல்லாவற்றின் மீதும் அது அப்படியே பரவிச் செல்லும். எதுவும் மீதமிருக்காது. 38 அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் ஆத்துமா எங்கே இருக்கப் போகிறது, ஆண்களே பெண்களே? நினைவில் கொள்ளுங்கள், இன்றிரவிலிருந்து ஐந்நூறு வருடங்கள் கழித்து, எங்கேயோ வெகு தொலைவில் உள்ள இந்தப் பாலைவனத்தில்கூட உங்கள் கல்லறைக் கல் காற்று வீசும்போது பறந்து போகலாம், சூறாவளிக் காற்று அதன் மேல் வீசலாம். உங்கள் கல்லறைக் கல் அங்கே இருக்கிறது, ஆனால் உங்கள் ஆத்துமா எங்கே இருக்கிறது? இப்போதுதான் காரியங்களைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம். எல்லா விதமான தவறான மார்க்கங்களும் (cults) மற்றும் காரியங்களும் எழும்பியிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். இது தீர்க்கதரிசியாலும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று. இப்போது, கொஞ்ச நேரத்திற்கு, நாம் அமைதியாகி, தேவனுக்கு முன்பாக உங்கள் இதயத்தைத் திறந்து, "தேவனே, இப்போது எனக்கு போஷியும்," என்று சொல்லுங்கள். நானும் அதே காரியத்தைத்தான் செய்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், ஆதியில் தொடங்கியதே தவிர பூமியில் இப்போது வேறு எதுவுமே இல்லை. தேவனுக்கு முன்பாக எந்தப் புதிய காரியங்களும் இல்லை. 39 இப்போது, ஆரம்ப காலத்தில், உலகம் முதன்முதலாகத் தொடங்கியபோது... ஒவ்வொரு செடியும், நமக்கு இருக்கும் எல்லாமே ஆதியாகமத்தில்தான் தொடங்கியது. ஆமென். ஜெனிசிஸ் (ஆதியாகமம்), "ஜெனிசிஸ்" என்ற வார்த்தைக்கு "ஆரம்பம்" என்று அர்த்தம், (அது சரிதான் என்று நினைக்கிறேன், இல்லையா சகோதரனே?), ஆரம்பம், எல்லாம் தொடங்கிய போது. அப்படியானால்-செடிகள் ஆதியாகமத்தில் தொடங்கினால், மனிதன் ஆதியாகமத்தில் தொடங்கினால், மதமும் ஆதியாகமத்தில்தான் தொடங்கியது. அது சரியா? சரி, இப்போது நாம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பின்னோக்கிச் செல்வோம். நிச்சயமாக, அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியே வந்தபோது, நமக்குத் தெரிந்தபடி முதலில் அவள் இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள், காயீன் பிறகு ஆபேல், இரண்டு மகன்கள். இப்போது, அந்தச் சிறுவர்கள், தாங்கள் மரணத்துக்குரியவர்களாக ஆக்கப்பட்டு விட் டோம், மரிக்கப் போகிறோம் என்பதைக் கண்ட பிறகு, தேவனிடத்தில் தயவு பெற முயற்சி செய்தார்கள். அவர்கள் இருவருமே ஒரு பலியைக் கொண்டு வந்தார்கள். 40 நேற்று இரவு நான் சொன்ன ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இங்கே நான் நினைவுகூருகிறேன். தேவன் மதத்தை மட்டுமே கேட்டிருந்தால், அவர் கேட்டதெல்லாம் அவ்வளவுதான் என்றால், காயீன் நீதிமானாக்கப் பட்டிருப்பான். ஆபேல் நம்பியபடியே காயீனும் விசுவாசித்து வந்தான். ஆபேல் ஒரு பலியைக் கொண்டு வந்தது போலவே காயீனும் ஒரு பலியைக் கொண்டு வந்தான். ஆனால் காயீனின் பலி கிரியைகளினால் இருந்தது. அவன் தனது தோட்டத்தை வளர்த்து, கிரியைகளினால் தன்னால் முடிந்த சிறந்த பழங்களைக் கொண்டு வந்தான். ஆனால் ஆபேலோ விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் பட்டான். அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். கவனியுங்கள். தீவிரவாதம் எங்கே தொடங்கியது என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்தத் தவறான மார்க்கங்கள் ஒவ்வொன்றும் எங்கே தொடங்குகின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த குழப்பம் எல்லாம் எங்கே தொடங்குகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். தேவனுடைய உதவியினால், பரிசுத்த ஆவியானவர் இன்று மதியம் இங்குள்ள ஒவ்வொரு இதயத்திலும் இதை எவ்வளவு ஆழமாக வைக்க வேண்டும் என்றால், அது ஒருபோதும் வெளியே வரக்கூடாது. 41 இப்போது, பின்பு காயீன் வந்து முழங்காலடியிட்டு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவர்கள் வாசலின் கிழக்குப் பக்கத்திற்கு வந்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன், ஏனென்றால் ஜீவவிருட்சத்துக்குப் போகிற வழியைக் காக்கிறதற்குச் சுடரொளி வீசும் பட்டயத்துடன் தூதன் அங்கேதான் நின்றான். அவன் ஜனங்களை ஜீவவிருட்சத்தின் அருகே விடாமல் காத்துக்கொண்டிருந்தான். இப்போது-இப்போது ஜனங்களை மீண்டும் ஜீவவிருட்சத்தினிடத்திற்குத் திருப்பிக் கொண்டு வர அவர் இங்கே இருக்கிறார். இயேசுவே நமது ஜீவவிருட்சமாக இருந்தார். அந்த ஸ்திரீ மரணத்தின் விருட்சமாக இருந்தாள். நாம் நமது தாயின் கனியாக இருக்கிறோம். அவள் கனிதரும் விருட்சமாக இருந்தாள். அவள்... நாம் இங்கே வந்தபோது... ஸ்திரீயினாலே மரணம் வந்தது, மேலும் ஸ்திரீயினாலேயே ஜீவனும் வந்தது, அது கிறிஸ்து இயேசு என்னும் மனுஷனைக் கொண்டுவந்தது. ஆனால் அந்த ஸ்திரீ... எப்போது...?... இயற்கையான, பாலியல் ரீதியாகப் பிறந்த அனைவரும்... அந்த நபர் மரிக்க வேண்டும். ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த மனுஷனோ, ஒருக்காலும் மரிப்பதில்லை. அவன்... 42 அவர் அங்கே யூதர்களுடன் நின்றபோது, அவர்கள், "எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்கள்" என்றார்கள். அதற்கு அவர், "அவர்கள் அனைவரும் மரித்தார்கள்" என்றார். அவர் சொன்னார்: "ஆனால் பரலோகத்திலிருந்திறங்கி வந்த ஜீவ அப்பம் நானே. இந்த அப்பத்தைப் புசிக்கிறவன், ஒருக்காலும் மரிக்கமாட்டான்." அவர் யார்? ஜீவவிருட்சம். நாம் இயற்கையான பிறப்பின் மூலம் இங்கே வந்து, மண்ணுக்குத் திரும்ப வேண்டியது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாகவே நாம் ஆவிக்குரிய பிறப்பைப் பெற்றிருந்தால், பூமியின் தூளியிலிருந்து எழுந்திருப்போம். இதோ அவர் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். பின்பு காயீன் மார்க்கப்பற்றுள்ளவனாய் வந்து, தனக்கென்று ஒரு பலிபீடத்தை, ஒரு சபையைக் கட்டி, முழங்காலடியிட்டான். இப்போது இந்த இரண்டு திராட்சச்செடிகளை கவனியுங்கள். இங்கே இருப்பதைப்போல, நான் அவைகளை திராட்சச்செடிகளாக உருவாக்கப் போகிறேன். 43 இப்போது, காயீன் வாசலண்டையில் வந்து முழங்காலடியிட்டான், அவன் ஒரு நாத்திகன் அல்ல. அநேகர் அந்திக்கிறிஸ்து ரஷ்யா என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை உங்கள் மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். ஒருபோதும் இல்லை... அந்திக்கிறிஸ்து மார்க்கப்பற்றுள்ளவன். இயேசு சொன்னார், "இந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் அவை வஞ்சிக்கும்." ரஷ்யாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் வெறும் நாத்திகர்களின் கூட்டம். ஆம், ஆனால் அந்திக் கிறிஸ்து உங்களுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந் திருக்கிறான். அவன்தான் வஞ்சிக்கிறவன். நினைவில் கொள்ளுங்கள், யூதாஸ்... இயேசு கிறிஸ்து வெளிப்பட்ட அதே நேரத்தில்தான், அந்திக்கிறிஸ்துவான யூதாஸும் வந்தான். இயேசு தம்மை தேவனுடைய குமாரனாக வெளிப்படுத்திய அதே நேரத்தில்தான், யூதாஸும் தன்னை வெளிப்படுத்தினான். இயேசு விலகிச் சென்ற அதே நேரத்தில்தான், யூதாஸும் விலகிச் சென்றான். பரிசுத்த ஆவியானவர் வந்த அதே நேரத்தில்தான், அந்திக்கிறிஸ்துவின் ஆவியும் வந்தது. 44 அவர்கள் ஒரே சபையில் சகோதரர்களாக இருந்தார்கள். ஆமென். ஓ, நான் வார்த்தையை நேசிக்கிறேன். பாருங்கள். அது உங்களுக்குள் ஜீவனை வைக்கிறது. கவனியுங்கள், அது தேவனுடைய வார்த்தை. இப்போது காயீன் மார்க்கப்பற்றுள்ளவனாய் தன் பலியைச் செலுத்தி, ஆராதனையில் தலைவணங்கியபோது... ஆதிஅடிப்படையைப் பொறுத்தவரை, ஆபேல் தனது மார்க்கத்தில் எவ்வளவு உறுதியாக இருந்தானோ, அதேபோல அவனும் உறுதியாகவே இருந்தான். தேவன்... ஒருவேளை... அடிப்படைவாதத்தைப் பற்றிப் பேசினால், தேவன் ஆராதனையை எதிர்பார்க்கிறார். காயீன் ஆராதித்தான். தேவன் பலியை எதிர்பார்க்கிறார். காயீன் பலியைச் செலுத்தினான். ஆனால் அவன் அதைத் தவறான வழியில் செய்தான். என் நேரம் வேகமாகச் செல்லப் போகிறது என்று எனக்குத் தெரிவதால், இப்போது நாம் இதிலிருந்து தொடங்கப் போகிறோம். இப்போது, சரியாக இங்கிருக்கும் இந்த இரண்டு திராட்சச்செடிகளில் இருந்து தொடங்குவோம். இன்று பூமியில் நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் எடுத்து, அதை நான் ஆதியாகமத்தில் உங்களுக்குக் காட்ட முடியும். இப்போது அது வித்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் நமக்கு இவ்வளவு குழப்பங்கள் இருக்கின்றன. அது வேறுவிதமாக வெளிப்படுகிறது. காண்கிறீர்களா? ஒரு கோதுமை மணி ஒரு மணியாகத் தொடங்கி, பல மணிகளாக முடிவது போல. இங்கிருந்துதான் இந்தக் கொள்கைகள் எல்லாம் வருகின்றன, இந்த முட்டாள்தனங்கள் எல்லாம் வருகின்றன, எல்லா விபச்சாரங்களும் இங்கிருந்து தான் வருகின்றன, எல்லா ஒழுக்கக் கேடுகளும் இங்கிருந்துதான் வருகின்றன. அது ஆதியாகமத்தில், ஆதியிலேயே தொடங்கியது. 45 இது ஒரு தோட்டத்தைப்போல பயிரிடப்பட்டு வருகிறது. உண்மையான கோதுமையானது களைகளுக்கும் நெருஞ்சில் களுக்கும் நடுவே முளைத்து வந்திருக்கிறது. ஆனால் அது எப்போதும் கோதுமையாகவே இருந்திருக்கிறது. உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது, உலகம் எவ்வளவு பொல்லாததாக இருக்கிறது என்று நீங்கள் எப்பொழுதும் பேசுகிறீர்கள். அது உண்மைதான். ஆனால் சபை எப்பொழுதும் எவ்வளவு மேன்மையாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். நாம் அந்தப் பக்கத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். இயேசு சொன்னார், "அவைகள் இரண்டும் ஒன்றாக வளரட்டும்." உலகம் மேன்மேலும் பொல்லாததாக மாறிக் கொண்டிருக்கும்போது, சபை எப்பொழுதும் அதிக வல்லமையுள்ளதாக மாறிக் கொண்டிருக்கிறது. வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். அல்லேலூயா. நாம் செல்வோம். மகிமை. காற்றடிக்கிறது; உங்கள் பாய்மரங்களை விரியுங்கள். அல்லேலூயா. புயலுக்கு நேராக முன்னோக்கிச் செல்லுங்கள். நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? கேப்டன் யார்? அவர் அதை கவனித்துக் கொள்வார். இப்போது, "பயப்படாதே, நான் எப்பொழுதும் அங்கே இருக்கிறேன்." காண்கிறீர்களா? 46 கவனியுங்கள், ஆதியாகமத்திலிருந்து இந்த இரண்டும் இப்போது வருகிறது. அவைகளைக் கொண்டு வருவோம். அங்கே காயீன் இருந்தான், தேவன் ஆபேலை ஆசீர்வதித்ததைக் கண்டவுடனேயே, அவன் பொறாமை கொண்டான். அது சரிதானே? ஒரு மார்க்கப்பற்றுள்ள ஆராதனைக்காரன் பொறாமை கொள்கிறான்... இப்போது, காயீன் மரித்தான், ஆனால் அவனுடைய ஆவி மரிக்கவில்லை. பின்பு அவன் வந்து தன் சகோதரனைக் கொன்றான். அது சரிதானே? மீண்டும் இது யூதாஸுக்கும் இயேசுவுக்கும் ஒரு சரியான நிழலாக இருக்கிறது. காண்கிறீர்களா? அவைகளை இன்னும் மேலே கொண்டு செல்வோம். நாம் அதை பேழை வரைக்கும், முழுவதுமாகக் கொண்டு செல்ல முடியும். ஆனால் நேரம் முடிவதற்கு முன்பு நான் உங்களுக்குச் சில காரியங்களைச் சொல்ல விரும்புகிறேன். கவனியுங்கள், வேதாகமத்தின் ஊடாக அவைகளை நாம் கொண்டு வருவோம். பாருங்கள். தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே அழைத்த நாட்களில், அது சபைக்குச் சரியான நிழலாக இருந்தது. அவர்கள் ஏற்கனவே வெளியே வந்தபோது, அந்த இரவில் தேவன் ஒரு ஆட்டுக்குட்டியின் மூலம் இஸ்ரவேலுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தார். பதினான்கு நாட்கள் அதை வைத்திருக்க வேண்டும், அது பழுதற்றதாக இருக்க வேண்டும், பின்பு அது சாயங்கால வேளையில் அடிக்கப்பட வேண்டும். 47 இஸ்ரவேலர் அனைவரும் அதன்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள். பின்பு அது அடிக்கப்பட்டு, அந்தப் பழைய சிறிய கதவுகளின் மீதும் மற்ற இடங்களிலும் ரத்தம் பூசப்பட்டது. அவர்கள் ரத்தத்தின்கீழ் உள்ளே சென்று, புறப்பட்டுச் செல்லும் நேரம் வரும்வரை ரத்தத்தின்கீழேயே தங்கியிருந்தார்கள். இது கிறிஸ்துவுக்குச் சரியான நிழலாகும். எவராலும் அவரிடத்தில் எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிலாத்து, "எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாருங்கள், அவரைக் குறித்து நான் என் கைகளைக் கழுவிக் கொள்கிறேன்" என்றான். ரோம நூற்றுக்கதிபதி, "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்றான். யூதாஸ், "குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்தேன்" என்றான். அவரிடத்தில் எவராலும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இந்த உலகத்தின் பொல்லாத அதிகாரிகளுக்கு முன்பாக விசாரிக்கப்பட்ட குற்றமில்லாத தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார். பின்பு சாயங்காலத்திலே, முழு இஸ்ர வேலும் அவருடைய மரணத்திற்குச் சாட்சியாக, "இவருடைய இரத்தம் எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக" என்றார்கள். அவர் கொல்லப்பட்டார். பலியிடப்பட்ட அந்த ஆட்டுக்குட்டியாகிய அவருடைய சரீரத்தில் ஒரு எலும்பும் முறிக்கப்படவில்லை, இது நிச்சயமாக ஒரு சரியான நிழலாகும். 48 இஸ்ரவேல் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதாக தேவன் வாக்குத்தத்தம் செய்தார். அது இயற்கையான சபையாக, இன்றைய ஆவிக்குரிய சபைக்கு நிழலாக இருந்தது. எப்படி... அவர்கள் நதியைக் கடந்தபோது, அதாவது சிவந்த சமுத்திரத்தைக் கடந்து அக்கரைக்குப் போனபோது, அவர்களிடம் அப்பம் இல்லை. அவர்கள் தங்களுக்கு இருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார்கள். தேவன் அவர்களைப் பராமரிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருந்தார். அந்த இரவில், வானத்திலிருந்து மன்னா மழையாகப் பெய்து, சுற்றியிருந்த தரை முழுவதையும் நிரப்பியது. மறுநாள் காலையில், அவர்கள் வெளியே சென்றார்கள். தேவன் அவர்களுக்கு அப்பத்தை வழங்கியிருந்தார். அவர்கள் அந்தச் சிறிய அப்பத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்தார்கள். அது தேனைப்போல ருசியாகவும் இனிப் பாகவும் இருந்ததாக அவர்கள் சொன்னார்கள். நீங்கள் எப்போதாவது அதை ருசி பார்த்திருக்கிறீர்களா? நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாகிய ஆயிர வருட அரசாட்சிக்குப் பயணம் செய்து கொண்டி ருக்கும் போது, நமக்கான ஆகாரத்தை வழங்குவதற்காக இறங்கி வரும் பரிசுத்த ஆவியானவருக்கு அது ஒரு சரியான நிழலாக இருந்தது: இது ஒரு அழகான நிழல். 49 நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், "அதை அதிகமாகப் பொறுக்க வேண்டாம், இன்றைக்கு உங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்." ஒரு நாள் சபைக்குச் சென்று, அடுத்த வருடம் வரை உங்களுக்குப் போதுமான அளவு மார்க்கப்பற்றைப் பெற முயற்சிக்காதீர்கள். அது நிலைக்காது. மீதியாக வைக்கப்பட்டதில் புழுக்கள் உண்டாயின. இன்று நமது அநேக பெந்தெகொஸ்தே சபைகளில் இதுதான் பிரச்சனையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தொடர்ந்து செல்ல முயற்சிப்பதில் உங்களிடம் நிறையப் புழுக்கள் உருவாகிவிட்டன. நாம் இப்போதே இன்னும் உயரத்திற்கு எழும்பி, முன்னோக்கிச் செல் வோம். அதுதான் சரி. எவ்வளவு அழகான ஒரு நிழல். மேலும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் வரை, அந்த நாள் முதல் மன்னா ஒருபோதும் பெய்யாமல் நின்றதில்லை. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த ஆவியானவர், ஆயிர வருட அரசாட்சி வரும் வரையிலும், இயேசு வல்லமையோடு வரும் வரையிலும் சபையின் மேல் இறங்குவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்: மீண்டும் அந்தப் பழைய தானியம். 50 மற்றொரு அழகான நிழலைக் கவனியுங்கள். மோசே ஆரோனிடம் சொன்னான், அவன் மற்றவர்களிடம் வெளியே சென்று ஏழு பெரிய ஓமர் அளவு அதை நிரப்பிச் சேகரிக்கும்படி சொன்னான். அது கெட்டுப்போகாதபடி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குப் பின்னால் அவர்கள் அதை வைக்க முடியும். அது ஒரு பெரிய, அற்புதமான காரியம். அதற்குப் பிறகான ஒவ்வொரு தலைமுறையிலும், ஒரு மனுஷன் ஆசாரியனாக மாறும்போது, அவன் உள்ளே சென்று, ஆதி மன்னாவிலிருந்து ஒரு வாய் அளவு எடுத்து ருசி பார்க்கலாம் என்று அவர் சொன்னார். அவர்கள், "இது என்ன?" என்று கேட்கும்போது, அவர்கள், "இது ஆதியிலிருந்தே இருக்கிறது" என்று சொல்வார்கள். ஒரு வாய் அளவு... இப்போது ஒவ்வொரு மனுஷனும்... இதோ அது இருக்கிறது. ஆசாரியத்துவத்திற்கு வருகிற ஒவ்வொரு மனுஷனும், இப்போது நாம் அனைவரும் ஆசாரியத்துவத்தில்தான் இருக்கி றோம். ஆசாரியத்துவத்திற்கு வருகிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும். நாம் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமும், சுதந்தரமான ஜனமுமா யிருந்து, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிறோம். மறுபடியும் பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஆசாரியர்களாய் இருக்கிறோம். 51 அந்த நாளில், அவர் சொன்னார், "இதை வைத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொரு முறையும் ஒரு ஆசாரியன் நியமிக்கப்படும்போது, உள்ளே சென்று அவனுக்கு ஆதி மன்னாவிலிருந்து ஒரு வாய் அளவு கொடுங்கள்." என்ன ஒரு நாள். என்ன ஒரு உறுதிப்படுத்தல். என்ன ஒரு அத்தாட்சி. இது சரியான நிழல். பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, பரிசுத்த ஆவியானவரின் யுகம் முழுவதுக்கும் மன்னாவை வழங்க தேவன் சித்தமாயிருந்தார். அவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் இருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த அறை முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் பிரிந்து அவர்கள்மேல் அமர்ந்தது. அவர்களால் இனிமேலும் அமைதி யாக இருக்க முடியவில்லை. வீதிகளுக்குள் அவர்கள் வெளியே சென்று, ஒரு பைத்தியக்காரர்களின் கூட்டத்தைப் போல, துள்ளிக் குதித்து, சத்தமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தார்கள். 52 பேதுரு அவர்களிடம் சொன்னான், "இப்போது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இந்தக் காரியத்தின்...?..." என்றான். மேலும் அவன், "நீங்கள் மனந்திரும்பி, உங்கள் பாவமன்னிப்புக்கென்று ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் வாக்குத் தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளை களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். அதாவது உள்ளே வருகிற எவரும், பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய உண்மையான மன்னாவில் சிலவற்றைப் பெற முடியும் (அல்லேலூயா.), அதைப் போலத் தோற்றமளிக்கும் ஒன்றையல்ல, ஆனால் உண்மையானவற்றில் சிலவற்றை, ஆதியில் இருந்ததில் சிலவற்றைப் பெற முடியும். பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய அதே பரிசுத்த ஆவியானவர், திரைக்கு அப்பால் ஊடுருவிச் சென்று ஆதி மன்னாவிலிருந்து ஒரு வாய் அளவு பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனுஷன்மீதும் இன்றும் இறங்குகிறார். 53 இந்த முறை நீங்கள் ஒரு வாய் அளவு பெற மாட்டீர்கள். நீங்கள் ஒரு இதயம் நிறையப் பெறுவீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய அதே பரிசுத்த ஆவியானவர் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் சொன்னார், "இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், அரிசோனாவின் ஃபீனிக்ஸில் இருப்பவர் களுக்கும் உரியது." நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற அவர்கள் (ஆமென்.) கன்மலையின் தேனை விரும்புகிறார்கள். ஒரு மேய்ப்பனைப் பார்க்கும்போது, அவர்கள் எப்படிச் சிறிய தோல்பைகளைச் சுமந்து செல்வார்கள் என்பதை வைத்து, நான் இப்படி ஒரு சிறிய கருத்தைச் சொல்வது வழக்கம். ஒரு முதிர்ந்த செம்மறியாடு வியாதியடையும்போது, அவர்கள் கன்மலையின் மேல் கொஞ்சம் தேனை ஊற்றுவார்கள், அந்த வியாதியுள்ள ஆடு கன்மலையிலிருந்து தேனை நக்கத் தொடங்கும். தேனை நக்கும்போது, அதோடு சேர்த்து கொஞ்சம் சுண்ணாம்புக் கல்லும் உள்ளே செல்லும், அந்தச் சுண்ணாம்புக் கல் வியாதியுள்ள ஆட்டைக் குணமாக்கும். 54 இந்த மதிய வேளையிலே ஒரு தோல்பை நிறைய அதை நான் இங்கே வைத்திருக்கிறேன், நான் அதை கிறிஸ்து இயேசு என்னும் கன்மலையின் மேல் ஊற்றப் போகிறேன், வியாதியுள்ள ஆடுகளாகிய நீங்கள் அதை நக்கத் தொடங்குங்கள். உலகம் எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நீங்கள் அதில் சிறிதளவு பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன். அதுதான் சரி. ஆமென். கன்மலையிலே தேன் இருக்கிறது. மேலும் சகோதரனே, சகோதரியே நினைவில் கொள்ளுங்கள், நான் அதை மெத்தடிஸ்ட் சபையின் மீதோ, பாப்டிஸ்ட் சபையின் மீதோ, பெந்தெகொஸ்தே சபையின் மீதோ ஊற்ற மாட்டேன். அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கே, ...?...-ன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் ஊற்றுவேன். ஆம். வியாதியுள்ள ஆடுகளே, நக்குங்கள், நக்குங்கள், நக்குங்கள், நீங்கள் நிச்சயமாக கொஞ்சம் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவீர்கள். உங்கள் சத்தத்தின் உச்சிக்குச் சென்று சத்தமிடுங்கள், சத்தத்தின் உச்சிக்குச் சென்று கத்துங்கள். நீங்கள் நக்கும்போது, அதிலிருந்து சில வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள். மிக விரைவாக...?... ஆமென். ஆம். கன்மலையிலே தேன், தாவீது அதைக் குறித்துப் பேசினார். 55 சரி, கன்மலை. குணமாக்கும் ஒரு விதமான தன்மை ஒரு கன்மலையில் இருக்கிறது. பழைய காலத்தில், யாரையாவது வெறிநாய் கடித்தால், அவர்கள் அவரை ஒரு வெறிநாய்க்கல்லில் ஒட்டச் செய்வார்கள். அது ஒட்டிக்கொண்டால், அவர் குணமடைவார். அது ஒட்டிக்கொள்ளாவிட்டால், அவர் மரித்துப்போவார். நல்லது சகோதரனே, எனக்குத் தெரிந்த மிக மோசமான வெறிநாய் பிசாசுதான். எனக்குத் தெரிந்த சிறந்த குணமாக்கும் மருந்து அநாதி கன்மலைதான். அதனிடம் செல்லுங்கள். அதைப் பிடித்துக்கொள்ளுங்கள். அல்லேலூயா. அது பாவத்திற்கும் வியாதிக்கும் இரட்டிப்பான மருந்தாக இருக்கிறது. ஓ, இன்று சபைக்குத் தேவையானது, இங்கே மூலையில் ஒரு புதிய கட்டிடமல்ல. சபையில் ஒரு புதிய பைப் ஆர்கனோ அல்லது சில புதிய இருக்கைகளோ அல்ல. அதற்குத் தேவையானது என்னவென்றால், ஒரு நல்ல பழைய காலத்துச் செயின்ட் பால் எழுப்புதலும், வேதத்தின்படியான பரிசுத்த ஆவியானவர் திரும்பவும் சபைக்குள் வருவதும், அக்கினியிலே பிரசங்கிக்கப்படும் மனந்திரும் புதலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் எளிமையும்தான். இயேசு, "நான் உயர்த்தப் பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்" என்றார். பரிசுத்த ஆவியும் அக்கினியும்... அந்த அக்கினியை அணையவிட்டால், நாம் மூழ்கிவிடுவோம். 56 நான் நினைத்துப் பார்க்கிறேன், பெரிய இறையியலாளர்கள்... நான் பள்ளிகளில் நின்றி ருக்கிறேன், அவர்கள் ஒரு பெரிய அக்கினி வரையப்பட்டதையும், பெந்தெகொஸ்தே நாளில் நடந்த பெரிய காரியங்களையும் வரைந்து வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன், மேலும் அவை அனைத்தையும் வரலாற்றில் நிகழ்ந்தவையாக மட்டுமே அவர்கள் காண்பிக்கிறார்கள். குளிரில் உறையும் ஒரு மனிதன், வரையப்பட்ட ஒரு அக்கினியினால் எப்படித் தன்னைச் சூடாக்கிக்கொள்ள முடியும்? பசியால் வாடும் ஒரு மனிதன், வரையப்பட்ட ஒரு உணவுப் படத்திலிருந்து எப்படிச் சாப்பிட முடியும்? தேவன் வரையப்பட்ட ஒரு படத்தினால் மயக்கி, ஏமாற்றுகிற ஒரு மனுஷன் அல்ல. பரிசுத்த ஆவியானவர் அன்று எப்படி இருந்தாரோ, இயேசு கிறிஸ்து அன்று எப்படி இருந்தாரோ, அவர் இன்றும் அப்படியே இருக்கிறார், அன்று இருந்ததைப் போலவே இன்றும் இருக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். நிச்சயமாக. நமக்குத் தேவையானது அந்த அக்கினிதான். சகோதரனே, உங்கள் சபையில் உள்ள அக்கினியை அணையவிட்டால், சபை அழிந்துவிடும். அதுதான் சரி. 57 அதிக நாட்களுக்கு முன்பல்ல, யாரோ ஒருவன் சொன்னான், "போதகரே, நீங்கள் எப்போதாவது..." பல காலங்களுக்கு முன்பு, என் ஊரில் ஒரு முதிர்ந்த கறுப்பின மனிதர் இருந்தார். அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார். அவர் ஒரு பாப்டிஸ்டாகவும் இருந்தார். மேலும் அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார். அப்போது மூப்பர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "நண்பனே, உனக்கு ஒன்று தெரியுமா? நீ இப்படிப் பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால், நீ நிச்சயமாக உன்னுடைய சபையை அழித்துவிடுவாய்" என்றார்கள். அதற்கு அவர், "இங்கே பாருங்கள் மூப்பரே" என்றார். "எந்தச் சபையாவது தனக்குள் பரிசுத்த ஆவியின் அக்கினியைக் கொண்டிருந்தும் செத்துப்போகுமானால், நான் அந்தப் பழைய திராட்சச்செடிகளில் ஏறி, இந்தக் கலசத்தின் உச்சிக்கு...?... சென்று, என் கறுப்புக் கைகளை அதன் மேல் வைத்து, 'மரித்தோரால் சட்டத்தை மீறுகிற, சட்டம் ஆசீர்வதிக்கப் பட்டது...?...' என்று சொல்வேன்" என்றார். சரிதான். அவர்கள் மரிப்பதில்லை, அவர்கள் உயிருள்ளவர்களாக மாறுகிறார்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் உயிருள்ளவர்களாக மாறுவ தற்காக, அவர்கள் உலகக் காரியங்களுக்கு மரிக்கிறார்கள். 58 இது எனக்கு ஒன்றை நினைவூட்டுகிறது, ஒருமுறை நானும் என் சகோதரனும் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தோம். நான் ஒரு வயதான ஆமையைப் பார்த்தேன். இந்த நாட்டில் அவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓ, அது நடப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அது எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும்... நான் பார்த்ததிலேயே மிகவும் வேடிக்கையான விஷயம் அது என்று நினைத்தேன். நான் அதை எடுப்பதற்காக அதன் அருகே சென்றேன். அது என்ன செய்தது தெரியுமா? அது தன் ஓட்டிற்குள், "சுருக்!" என்று சென்றுகொண்டது. நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்லும்போது, இந்தப் பழைய குளிர்ந்த, சடங்காச்சாரமான சில சபைகளைத் தான் அது எனக்கு நினைவூட்டியது. அதுதான் சரி. "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அது ஆபத்தானது. அதை வைத்து விளையாடாதீர்கள்." நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் சென்று ஒரு நீண்ட விலோ மரக் குச்சியை வெட்டி வந்தேன். நான் அதை அதன்மேல் வைத்தேன். அதனாலே ஒரு சிறிய நன்மையும் உண்டாகவில்லை, ஒரு துளியும் இல்லை. நீங்கள் அவர்களை அடித்து திருத்த முடியாது. அதுதான் சரி. 59 "நான் அதைச் சரிசெய்கிறேன்" என்று சொல்லி, நான் அதைச் சிறு ஓடைக்குக் கொண்டு சென்று, அதைத் தண்ணீருக்குள் அமிழ்த்தினேன். சில குமிழிகள் மட்டுமே வந்தன. அவ்வளவுதான். சகோதரனே, நீங்கள் அவர்களை இப்படியாகவோ, அப்படியாகவோ, தலைகீழாகவோ, உங்களுக்குத் தோன்றிய படியோ எப்படி வேண்டுமானாலும் ஞானஸ் நானம் கொடுக்கலாம். அவர்கள் உள்ளே செல்லும்போது காய்ந்த பாவியாகவும், வெளியே வரும்போது நனைந்த பாவியாகவும் வருவார்கள். அவர்கள் இன்னமும் பாவிகளாகவே இருக்கிறார்கள். என்னால் அதை நகரச் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்தேன் தெரியுமா? ஒரு காகிதத்தையும், கொஞ்சம் விறகுகளையும் எடுத்து, ஒரு சிறிய நெருப்பை மூட்டி, அந்தப் பழைய ஆமையை அதன் மேல் வைத்தேன். நான் சொல்லவருவது போல, அதன் பிறகு அது நடக்கத் தொடங்கியது...?... பரிசுத்த ஆவியின் வல்லமை, தேவனின் வல்லமை ஒவ்வொரு இதயத்திலும் அசைகிறது. அது அவர்களை வெளியே வந்து, செயல்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் சபைக்கு வந்து, அவருடைய நாமத்துக்கு மகிமையுண்டாகச் சத்தமிடச் செய்யும். ஆமென். ஒரு அழகான நிழல்... 60 அந்தச் சபை எழும்புவதைப் பாருங்கள். இஸ்ரவேல் கடந்த வந்ததிலிருந்து அதை நாம் இங்கே கொண்டு வருவோம். வெறும் பத்து... சுமார் பத்து, பதினைந்து நிமிடங்களில், உங்களால்...?... அவ்வளவு நேரம் முடியும். எகிப்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் பாதையிலிருக்கும் இஸ்ரவேலிடம் நாம் வருகிறோம். இப்போது, அவன் கடந்து செல்ல வேண்டியிருந்தது... இஸ்ரவேல் மோவாபின் தேசத்தின் வழியாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மோவாப் அவனுக்கு ஒரு சகோதரனாக இருந்தான். மீண்டும் காயீனும் ஆபேலும், இந்த இரண்டு திராட்சச் செடிகளையும் கவனியுங்கள். மோவாப் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் லோத்தின் குமாரத்திகளின் பிள்ளைகள், அந்த மோவாபியர்கள். அவர்கள் கடந்து செல்ல விரும்பினார்கள். அதற்கு அவர்கள், "ஓ, இல்லை. நீங்கள் புனித-உருட்டாளர்கள் கடந்து செல்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்கள். ஓ, சகோதரனே, நான்-நான் இதை அப்படியே சொல்லிவிடுகிறேன். 61 பாருங்கள், அவர்கள் இருந்ததைப்போல அவர்கள் ஒரு அமைப்பாகக் கூட இருக்கவில்லை. அவர்கள் சபைப்பிரிவுகளைக் கடந்தவர்களாகச் சென்றார்கள். அவர்கள் கூடாரங்களில் குடியிருந்தார்கள். தங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்கு எந்த நிலமும் இருக்கவில்லை. அல்லேலூயா. அவர்கள் சுவிசேஷக் கூட்டத்தாராக இருந்தார்கள். இங்கே ஓடி வாருங்கள், மோவாப் அங்கே ஒரு பழைய, பின்வாங்கிப்போன தீர்க்கதரி சியிடம் ஆட்களை அனுப்பி, "நீ வந்து இஸ்ரவேலைச் சபிக்கவேண்டும்" என்றான். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இருவருமே ஒரே தேவனை விசுவாசிக்கிறார்கள், ஒருவன் மற்றவனைச் சபிக்க விரும்புகிறான். அவன் இவன்மேல் பொறாமை கொள்கிறான். அதுதான்... அந்த மனிதர்கள் இறந்து விட்டார்கள், ஆனால் அந்த ஆவி இன்னும் வாழ்கிறது. தேவன் தம்முடைய மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தம்முடைய ஆவியானவரை எடுப்பதில்லை. அவர் எலியாவை எடுத்துக்கொண்டு, தம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எலியாவின்மேல் வைத்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அது யோவான் ஸ்நானகனிடம் வெளிப்பட்டது, மேலும் கடைசி நாட்களில் மீண்டும் வரும் என்று முன்னறிவிக்கப்பட்டது. அது சரிதானே? அதே ஆவி. புரிகிறதா? சரி. அவர் தம்முடைய குமாரனை எடுத்துக் கொண்டார், ஆனால் அவருடைய ஆவி நிலைத்திருக்கிறது, அது நம்முடன் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், அது எப்போதும் இருந்தபடியே இருக்கிறது. கவனியுங்கள், பிசாசும் தன் மனிதனை எடுத்துக்கொள்கிறான், ஆனால் ஒருபோதும் தன் ஆவியை எடுப்பதில்லை. 62 இயேசுவை யார் குற்றவாளியாகத் தீர்த்தார்கள் என்று நினைவிருக்கிறதா? அறிஞர்களும், பெரிய சபைகளும், புகழ்பெற்ற மக்களும், இறையியலை மிக நுட்பமாக அறிந்திருந்த படித்த மக்களும்தான். ஆனால் அவர்களுக்கு இயேசுவை தெரியவில்லை. அதுதான் விஷயம். ஆம், ஐயா. நான் அவரை அவருடைய உயிர்த் தெழுதலின் வல்லமையில் அறிய விரும்பு கிறேன். எனக்கு வார்த்தையைக் குறித்து அதிகமாகத் தெரியாது, ஆனால் அதன் ஆசிரியரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அதுதான் முக்கியப் பகுதி. அது சரிதான். எனக்கு ஆசிரியரைத் தெரியும். சரி. கவனியுங்கள், அந்த மோவாபியர்கள் அங்கே எழுந்து நின்று, இஸ்ரவேலைச் சபிப்பதற்காக அந்தத் தீர்க்கதரிசியை அங்கே அழைத்தார்கள். இப்போது, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது, அடிப்படை உபதேசங்களைச் சார்ந்தவர்களே, உங்கள் கோட்டுகளைப் போட்டுக்கொள்ளுங்கள். கேளுங்கள், உங்கள் அதிர்ச்சியைத் தாங்கும் கோட்டுகளைப் பற்றிச் சொல்கிறேன். 63 கவனியுங்கள், இதோ மோவாப் வருகிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் பயணம் செய்ய தேவனுடைய கட்டளையுடன் இதோ இஸ்ரவேல் வருகிறது, தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தபடியே மிகச் சரியாகச் செல்கிறார்கள், இது இன்றைய பரிசுத்த ஆவி சபையின் மிக அழகான ஒரு நிழலாட்டமாக இருக்கிறது, அதே ஞானஸ்நானத்துடன் பயணம் செய்து, அதே மன்னாவைச் சாப்பிட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நேராக நகர்கிறது. இங்கே ஒரு கூட்ட அடிப்படை விசுவாசிகள் புறப்பட்டு வந்து, "இல்லை, ஐயா. என் நாட்டில் நீங்கள் அந்த வெறித்தனத்தைத் தொடங்கக் கூடாது" என்று சொல்கிறார்கள். அந்த இரண்டையும் பாருங்கள்... அந்தத் திராட்சைச் செடிகளைப் பார்க்கிறீர்களா? அங்கே மீண்டும் காயீனும் ஆபேலும் இருக்கிறார்கள். கவனியுங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக நிற்கிறது. இப்போது, நீங்கள் சொல்கிறீர்கள், "மோவாபியர்கள் அடிப்படை உபதேசங்களைச் சார்ந்தவர்களா?" பாலாக் என்ன செய்தான் என்று பாருங்கள், அல்லது பிலேயாம், பாலாக். அவன் தேசத்தில் உள்ள எல்லாப் பிரபுக்களையும், எல்லா வேதபாரகர்களையும் (D.D.'s) அழைத்தான். அவன் அவர்களை அங்கே கொண்டுவந்து, அவர்கள் ஏழு பலிபீடங்களைக் கட்டினார்கள், கீழே இஸ்ரவேலர் கட்டிய அதே வகையான பலிபீடங்கள் அவை. ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண். 64 அவன் ஏழு காளைகளைப் பலி யிட்டான், சுத்தமான பலியைக் குறிக்கும் விதமாக கீழே அவர்களும் அதையே பலியிட்டார்கள். கவனியுங்கள் கிறிஸ்தவர்களே, இதுதான். அவன் ஏழு ஆட்டுக்கடாக்களைப் பலியிட்டான், இது இயேசுவின் வருகையைக் குறிக்கிறது. ஒரு நிமிடம் அதை உங்கள் சிந்தையில் ஊற விடப்போகிறேன். அடிப்படையில், இஸ்ரவேலர்கள் எந்த அளவுக்கு அடிப்படை உபதேசங்களைச் சார்ந்தவர்களோ, அதே அளவுக்கு அவனும் இருந்தான். இரு தரப்பாரிடமும் ஏழு பலிபீடங்கள் இருந்தன. இரு தரப்பாரும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டு, ஒரே தேவனை ஆராதித்தார்கள். அது இன்றைய நாளின் படமாக இல்லையென்றால், எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஒருபோதும் ஒரு அடிப்படைவாத மனிதனோடு மோதாதீர்கள். தான் என்ன பேசுகிறோம் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அதோடு இயேசுவை அவனுக்குத் தெரியாது. கவனியுங்கள், அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருப்பான். 65 கவனியுங்கள், அவன் இதோ இருக்கிறான். இங்கே இந்த மனிதன் மேலேயிருக்கிறான். இப்போது, அடிப்படை உபதேசம் என்பதுதான் தேவன் எதிர்பார்ப்பது என்றால், அவர் அதைக் காயீனிடம் ஏற்றுக்கொண்டிருப்பார். அடிப்படை உபதேசம் என்பதுதான் தேவன் எதிர்பார்ப்பது என்றால், மலையின் அடிவாரத்தில் இஸ்ரவேலர் செலுத்திய அதே பலியை அவர்களும் செலுத்தியபடியால், அவர் அதைப் பிலேயாமின் கையிலும் ஏற்றுக்கொண்டிருப்பார். பேசப் போகிறார்கள்... "ஏன், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்." "நிச்சயமாக." "அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" "முற்றிலும்." "அவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா..." "நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்." "அவர் மீண்டும் வருவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" "அவர் திரும்புவார் என்று நான் ஒவ்வொரு நாளும் பிரசங்கிக்கிறேன்." அடிப்படைவாதி, புரிகிறதா? 66 அடிப்படைவாதி இன்றும் அதையே செய்கிறான்: சபையின் எல்லா அடிப்படை உபதேசங்களையும் பிரசங்கிக்கிறான். பெந்தெ கொஸ்தேக்கள் எந்த அளவுக்கு அடிப்படையாய் இருக்கத் துணிந்தார்களோ, அதே அளவுக்கு இவர்களும் அடிப்படையாய் இருக்கிறார்கள். அது சரிதான். ஆனால் கவனியுங்கள், ஒரே வித்தியாசம் என்னவென்றால், அடையாளங்களும் அற்புதங் களும் அவர்களைத் தொடர அவர்கள் கண்டார்கள், இவர்களோ அதைக் கொண்டி ருக்கவில்லை. தேவன் தமது சபையை அடையாளங்களாலும் அற்புதங்களாலும் உறுதிப் படுத்திக்கொண்டிருந்தார். அவர் எப்போதும் அப்படியே செய்தி ருக்கிறார், எப்போதும் அப்படியே செய்வார். அதே பலி, அதே மதச் சடங்கு, ஆனால் ஆபேலுக்குச் செய்தது போலவே தேவன் அவனை உறுதிப்ப டுத்திக்கொண்டிருந்தார். காயீனின் அந்த ஆவி இங்கே இருக்கிறது, எந்த அளவுக்கு மதப் பற்றுள்ளவனாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு மதப்பற்றுள்ள அடிப்படையான ஆவி. இங்கே மோவாபும் அதே வழியில்தான். ஆனால் அவனுக்கு அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் நேரமில்லை. இஸ்ரவேலுக்கு அவர்கள்மேல் ஒரு அக்கினித்தம்பம் தங்கியி ருந்தது. அவர்களுக்கு முன்பாக ஒரு வெண்கலச் சர்ப்பம் இருந்தது. அவர்களுடன் ஒரு பிளக்கப்பட்ட கன்மலை சென்றது. 67 அங்கே ஒரு கூட்ட பரிசுத்த-உருளிகள் (holy-rollers) தங்கள் காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நீங்கள், "பரிசுத்த-உருளிகளா?" என்று கேட்டீர்கள். ஆம், அவர்கள் பரிசுத்த-உருளிகள்தான். அவர்கள் இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான் இருந்தார்கள். நீங்கள், "பரிசுத்த-உருளிகளா?" என்கிறீர்கள். நிச்சயமாக. அவர்கள் செங்கடலைக் கடந்து, தங்கள் எதிரியின்மேல் வெற்றியைக் கண்டபோது, அவர்கள் மன்னாவைச் சாப்பிடுவதற்கு முன்பே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், மோசே எழுந்து நின்று, தன் கைகளை உயர்த்தி, ஆவியில் பாடினான். பிறகு மிரியாம் ஒரு தம்புரை எடுத்துக்கொண்டு, தம்புரை வாசிக்கத் தொடங் கினாள், அவளும் இஸ்ரவேலர் அனைவரும் குதித்து நடனமாடினார்கள். அது ஒரு பரிசுத்த ஆவியின் கூட்டமாக இல்லை யென்றால்...?... அது சரிதானே? அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த-உருளிகள், உலகத்தின் முன்பாக முட்டாள் தனமாகத் தெரிந்தார்கள். ஆபேலும் அப்படித் தான் இருந்தான். 68 ஆனால் அந்தத் திராட்சைச் செடி முளைத்து வருவதைப் பார்க்கிறீர்களா? இன்னமும் அதே செடிதான், அது ஆதியாகமத்திலிருந்தே வளர்ந்து வருகிறது. இங்கே அடிப்படைவாதிகளும் வருகிறார்கள், அதே அளவுக்கு அடிப்படையானவர்களாக. பாருங்கள். ஓ, அருமையே, இதைப்பற்றிப் பேச எனக்கு நேரம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் பாருங்கள், அந்த ஆவியைக் கீழே கொண்டு வாருங்கள். இயேசு வந்தபோது, அந்த ஆசாரியர்களும் இயேசுவைப் போலவே அடிப்படை உபதேசங் களில் உறுதியானவர்களாக இருந்தார்கள். இங்கே அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டிருந்தார், ஆனால் அவர்கள் அதற்கு எதிராக இருந்தார்கள். மாபெரும் பரிசுத்தவானாகிய பவுல் சொன்னார், "இங்கே இந்தத் திராட்சைச் செடிகள் முழுமையாகப் பூத்து, இப்போது நாம் இருப்பதுபோல பலன் கொடுக்கத் தொடங்கும் போது," அவர் சொன்னார், "அவர்கள் துணிகரமுள்ளவர்களும், இறுமாப்புள்ளவர்களும், தேவனை நேசிக்கிறதைப்பார்க்கிலும் இன்பங் களை நேசிக்கிறவர்களுமாயிருப்பார்கள், உடன் படிக்கையை மீறுகிறவர்களும், அவதூறு சொல்லுகிறவர்களும், இச்சையடக்கமில்லாதவர் களும், நல்லோரைப் பகைக்கிறவர்களுமா யிருப்பார்கள்." 69 நீங்கள் சொல்லலாம், "சகோதரர் பிரான்ஹாம், அவர்கள் அவிசுவாசிகள்" என்று. இல்லை, இல்லை. அடிப்படைவாதிகள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்; இப்படிப் பட்டவர்களை விட்டு விலகு. அல்லேலூயா. நாம் எங்கே இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். தேவன் எல்லா காலங்களிலும் அடையாளங் களாலும் அற்புதங்களாலும் தமது சபையை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அங்கே அதே செடி இருக்கிறது. இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா? இந்தப் பெரிய, நேர்த்தியான, பழமையான சபைகள் எப்படி அந்த வல்லமையை மறுதலிக்கின்றன, ஆனாலும் அதே வேதாக மத்தைப் பிரசங்கிக்கின்றன, அதே கிறிஸ்துவை விசுவாசிக்கின்றன, எல்லாவற்றிலும் நம்மைப் போலவே அடிப்படையில் எப்படி இருக்கின்றன என்று பார்க்கிறீர்களா? ஆனால் வார்த்தையை வெளிப்படுத்தக்கூடிய தேவனுடைய வல்லமை யைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். மகிமை. நான் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருக்கலாம், ஏனென்றால் நான் நன்றாக உணருகிறேன். சரி. ஓ சகோதரனே, கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் எவ்வளவு ஒரு விசித்திரமான வேதப்பகுதியை எடுத்துக்கொண்டேன், இன்னும் நான் அதற்கே வரவில்லை. ஆனால் நான் அதைப்பற்றி நினைத்தபோது... நான் விரைவாகச் சொல்ல வேண்டும். நாம் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா? 70 இந்தக் கடைசி நாளில்... கடைசி நாளில் மனிதர்கள் துணிகரமுள்ளவர்களாகவும் இறுமாப் புள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று பவுல் சொன்னார். அவர்கள் தங்கள் மக்களைத் திரைப்படங்களுக்கும், நடனங்களுக்கும், கிளப்புகளுக்கும், மற்றும் எல்லாவற்றிற்கும் செல்ல அனுமதிப்பார்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு, சென்று...?... "நாங்கள் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை ஆகியவற்றை விசுவாசிக்கிறோம். நாங்கள் பக்தியுள்ளவர்கள்; நாங்கள் விசுவாசிகள்." அந்த ஆசாரியர்களும் அப்படித்தான் இருந்தார்கள். காயீனும் அப்படித்தான் இருந்தான். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருப் பார்கள், ஆனால் தேவனுடைய தெய்வீக சுகமளிக்கும் வல்லமை, அந்நிய பாஷைகளில் பேசும் வல்லமை, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் வல்லமை, மற்றும் தொடரும் அடையாளங்கள் அற்புதங்கள் ஆகியவற்றை மறுதலித்து, "இது வெறித்தனம்" என்று சொல்வார்கள். அந்த அடிப்படைவாதிகள் இன்று மதியம் அந்த மரத்திலிருந்து இறங்கி, அடையா ளங்களும் அற்புதங்களும் தொடரும் இந்த இடத்திற்கு வருவது நல்லது (அல்லேலூயா). 71 கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து நான் வந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தேன். நான் மிகவும் சோர்வாக இருந்தேன், என்னால் நகரவே முடியவில்லை. அவர்கள் என்னை ஒரு தார்ச் சாலையிலிருந்து எழுநூறு மைல் தொலை வுக்கும், அங்கிருந்து குதிரை சவாரியாக சுமார் எழுபது அல்லது எண்பது மைல் தொலைவுக்கும் உள்ளே வேட்டையாடு வதற்காகக் கூட்டிச் சென்றார்கள். அங்கே ஒரு நாள், நான் ஒரு பழைய கிரிஸ்லி கரடியைத் துரத்திச் சென்று, அங்கே போய்ச் சேர்ந்து, கீழே இறங்கி, கர்த்தரைத் துதிக்கவும் சத்தமிடவும் தொடங்கினேன். கரடி என்னிடமிருந்து தப்பி ஓடிவிட்டது. அதனால் எப்படியோ நான் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. அதனால் நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். இரவு நெருங்கியபோது, திரும்பி வரும் வழியில் நான் தொலைந்து போனேன். நான் கீழே வந்து கொண்டிருந்தபோது, நான் முயற்சித்தேன்... என்னால் எந்தத் தடங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவு வெளிவந்திருந்தது, மேகங்கள் சூழ்ந்திருந்தன. பல ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்துபோன ஒரு பழைய இடத்தின் வழியாக நான் கடந்து சென்றேன். ஓ, அது பார்க்கவே பயமுறுத்தும் ஒரு இடமாக இருந்தது. 72 இந்தப் பழைய, சம்பிரதாயமான சபைகள் சிலவற்றை அது எனக்கு நினைவூட்டியது. நான் அங்கே பார்த்தேன், அங்கே நிலவு பிரகாசித்தபோது, அவை கல்லறைகளைப் போல் தெரிந்தன. சற்று நேரத்திற்குப் பிறகு, பரலோகத்திலிருந்து ஒரு காற்று இறங்கி வந்து அதன் வழியாகச் சென்றது. அது "ஊஊஊ" என்று சத்தமிட்டது. நான் நினைத்தேன், "ஓ, அருமையே. பயமாக இருக்கிறது." நான் நினைத்தேன், "ஆண்டவரே, ஏன் என்னை வழிதவற விட்டு, வெளியே இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு என்னைக் கொண்டுவந்தீர்?" அந்தப் பழைய துக்ககரமான சத்தம், "ப்ரூரூரூ." நான் நினைத்தேன், "ஓ, ஆம். நீர் செய்ததை நான் காண்கிறேன், ஆண்டவரே." ஒருகாலத்தில், அவை பெரிய மரங்களாக இருந்தன, ஆனால் காட்டுத்தீ வந்து, அவற்றை எரித்துவிட்டது. இந்தப் பெரிய சபைகள் பல, "வெஸ்லியன் எழுப்புதலைப் பாருங்கள். கால்வின், நாக்ஸ் மற்றும் அந்த எழுப்புதல்களை எல்லாம் பாருங்கள். அவை பெரிய மரங்களாக இருந்தன" என்று சொல்வதைப் போல. அவை இன்று ஏதோ பெரிய நெருப்பு எரிந்த இடமாக நிற்கின்றன, ஆனால் ஜீவனற்று இருக்கின்றன. 73 பச்சைப் புழு விட்டதைக் கம்பளிப் பூச்சி தின்றது. மெத்தடிஸ்டுகள் விட்டதை, பாப் டிஸ்டுகள் தின்றார்கள். பாப்டிஸ்டுகள் விட்டதை, பிரஸ்பிடீரியன்கள் தின்றார்கள். பிரஸ்பிடீரியன்கள் விட்டதை, பெந்தெகொஸ் தேக்கள் தின்றார்கள் (ஓ, அருமையே.) மரம் மொட்டையாகிப் பிளக்கும் வரைக்கும். மெத்தடிஸ்டுகளிடம் இருந்த மகிழ்ச்சி ஆரவாரம் போன்றவற்றை, பாப்டிஸ்டுகள் அவர்களிடமிருந்து திருடிக்கொண்டார்கள். அந்த மரத்தில் ஒன்றும் மீதமில்லாமல், ஒரு பெரிய, பழைய பிரம்மாண்டமான கல்லறை அங்கே நிற்பதுபோல அது குறைந்துவிட்டது (அப்பாடா. அது சரிதான்.), வெறும் ஒரு பெரிய பழைய கல்லறை. "ஓ, நாங்கள் ஒரு சபை." நிச்சயமாக நீங்கள் சபைதான். ஆனால் அவ்வளவுதான், ஒரு பெரிய பழைய கல்லறை. பிறகு திடீரென்று, பரலோகத் திலிருந்து பலத்த காற்று அடிப்பதுபோல அந்தக் காற்று இறங்கி வந்தது. அது ஒரு காலத்தில் வளர்ந்தது, இப்போது அவைகளால் செய்யமுடிந்தது முனகுவது மட்டும்தான். 74 இன்றைய இந்தச் சபைகளை அது எனக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த ஆவியானவர் தேசத்தில் வரும்போது, அடையா ளங்களும் அற்புதங்களும் எழத் தொடங்கும் போது, முதலில் அவர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியும், "ஓஓஓ, அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன. ஓஓஓ, என்ன ஒரு வெறித்தனம்" என்பார்கள். பழைய செத்த மரங்கள், அவற்றில் ஜீவன் இல்லை... ஆனால் பட்டை... அவற்றின் பட்டை எரிந்துபோய்விட்டது, இனி ஜீவன் மேலே வர முடியாது (அல்லேலூயா.): தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள் (ஆமென்.), ஏதேன் தோட்டத்தில் இருந்த அதே பழைய காயீன். நான் கேட்டேன், "ஓ, ஆண்டவரே, சபையில் என்ன நடக்கும்?" நான் யோவேலின் இந்த வசனத்தை நினைத்தேன். பச்சைப் புழு விட்டதைக் கம்பளிப் பூச்சி தின்றது. ஒன்று விட்டதை, மற்றொன்று தின்றது. ஆனால் நான் இன்னும் சில வசனங்களைப் படித்தேன், அது சொன்னது, "ஆனால் நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." 75 நான் நினைத்தேன், "ஆண்டவரே, நீர் எப்படி-எப்படித் திரும்ப அளிக்கப் போகிறீர்?" ஒருவேளை... நான் என் குதிரையின்மேல் உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன், அது நகரத் தொடங்கியது. சில நிமிடங்களில் நான் அதை நிறுத்திவிட்டு, "ஆண்டவரே, நீர் எப்படித் திரும்ப அளிப்பீர்?" என்றேன். உடனே, காற்று மீண்டும் வந்தது. இந்தப் பழைய மரங்களுக்குக் கீழே ஒரு கூட்டச் சிறிய மரங்கள் முளைத்திருப்பதை நான் கவனித்தேன், காற்று அவற்றின் மேல் மோதியது. அவை நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருந்தன. நான் சொன்னேன், "அது ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதலாக இல்லாவிட்டால், காட்டில் எட்டிப் போட்டு துள்ளிக்குதிப்பதுபோல..." அல்லேலூயா. தேவனுடைய ஆவியானவர் அசைவாடு வதற்காக அவரைத் துதியுங்கள். பரிசுத்த ஆவியானவர் பலத்த காற்று அடிப்பதுபோல வரும்போது, உலகத்தின் கண்களில் பயனற்றது என்று அழைக்கப்படும் ஒரு புதிய வளர்ச்சி மேலே வருகிறது. அல்லேலூயா. 76 அது என்ன? அது மேலே வருகிறது. "நான் திரும்ப அளிப்பேன்," என்று கர்த்தர் சொல்லுகிறார். அல்லேலூயா. "நான் திரும்ப அளிப்பேன்," என்று கர்த்தர் சொல்லுகிறார். "அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன" என்று சொல்லிக்கொண்டு அவர்கள் முனகி முக்கித் தவிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் இறங்கும்போது, அவர்கள் அதைக் கண்டிக்க மட்டுமே முடியும். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். உணர்வில்லாமல் விறைப்பாக அங்கே நின்றுகொண்டு, "ம்ம்ம்ம், ஓஓஓ, அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட காரியம் இல்லை என்று டாக்டர் ஜோன்ஸ் என்னிடம் சொன்னார். அதெல்லாம் மனோதத்துவம்தான். அதெல் லாம் போலியாக உருவாக்கப்பட்டது." ஆனால் உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்படட்டும், அங்கே கீழே சிலர் களிகூர்ந்துகொண்டும் துள்ளிக்குதித்துக்கொண்டும் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு மிகப்பெரிய நல்ல நேரத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? "நான் திரும்ப அளிப்பேன்," என்று கர்த்தர் சொல்லுகிறார். 77 காற்று வருவதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் கவனிக்கிறீர்களா? நான் நினைத்தேன், "அவை பெரிதாக வளரும் வரை அவற்றைச் சும்மா விட்டுவிட்டு, பிறகு ஏன் அவற்றின் வழியாய் வீசக்கூடாது?" அவர் சொன்னார், "இல்லை. ஒவ்வொரு முறையும் அந்த... அவற்றுக்குக் காற்று வேண்டும், இல்லாவிட்டால் உன் மரத்திற்கு ஆழமான வேர் இருக்காது. ஒவ்வொரு முறை அந்தச் சிறிய மரத்தின் மீது காற்று வீசும்போதும், அது அந்த வேர்களை இழுத்துத் தளர்த்துகிறது, அதனால் அது ஆழமாகப் பற்றிக்கொள்ள முடியும்." அல்லேலூயா. ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதன்மேல் இறங்கும்போது, ...-இன் வல்லமையால் அது அவனை இயேசு கிறிஸ்துவுக்குள் வேரூன்றி நிலைநிறுத்துகிறது. அல்லேலூயா. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? "நான் திரும்ப அளிப்பேன்," என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்படியானால் பரிசுத்த ஆவியானவரை உங்கள் வழியாய் அசைய விடுங்கள். ஒரு பழைய கால எழுப்புதலைப் போல முன்னோக்கிச் செல்லுங்கள். 78 எங்கள் பரலோகப் பிதாவே, "நான் திரும்ப அளிப்பேன்" என்று நீர் சொன்னதற்காக இன்று நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, பீனிக்ஸ் நகரில் உள்ள பரிசுத்த வான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தை நீர் மீண்டும் திரும்ப அளிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், ஆண்டவரே. அழைக்கப்பட்டவர்களை வெளியே கொண்டுவாரும், ஆண்டவரே; அவர்களை ஒழுங்குபடுத்தும். அன்பான பரலோகப் பிதாவே, உம்முடைய சபையை ஒழுங்கு படுத்தும். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கும்போதே இதை அருளும். நித்திய ஜீவனின் ஆவியானவர், ஒவ்வொருவர் மீதும் தங்கியிருப்பாராக. ஆண்டவரே, அடிப்படை உபதேசம் என்பது ஒரு போராட்டமல்ல என்பதை இன்று அவர்கள் காணக்கடவர்கள். தேவனின் பரிசுத்த ஆவியானவர் மக்களுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளங்களும் அற்புதங் களுமே அது. இன்று எங்களுடன் அசைவாடும் அக்கினித்தம்பத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அடையாளங்களுக்காகவும் அற்புதங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்து கிறோம். ஒவ்வொரு தலைமுறைக்கும் இருக்கக் கூடிய பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய, திரும்ப அளிக்கப்பட்ட மகிமையின் மன்னா விற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம். கர்த்தர் நல்லவர் என்று நாங்கள் ருசித்துப் பார்த்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ தேவனே, ஒவ்வொரு இருதயமும் முன்னோக்கிச் செல்லும் பரிசுத்த ஆவி சபையின் ஒரு பெரிய மாபெரும் அலகாக உருவாக்கப்பட அருள்புரியும். தேவனுடைய வல்லமை இப்போதே இந்தக் கட்டடத்திற்குள் ஊடுருவி ஒவ்வொரு விசுவாசிக்கும் ஞானஸ்நானம் அளிப்பதாக. ஆண்டவரே, ஞானஸ்நானம் அளித்து, ஒவ்வொரு பாவியையும் இரட்சித்து, ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கி, உம்முடைய நாமத்தினிமித்தம் இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் மகிமையைப் பெற்றுக் கொள்ளும். ஆமென். அல்லேலூயா. கடைசி காலம் 2